search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி கூட்டுக்குடிநீர்"

    • ஊராளிப்பட்டி ஊராட்சி கிராம மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். தண்ணீருக்காக பல விவசாய தோட்டங்களை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
    • காவிரி கூட்டுக்குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளுக்கு வழங்கும் காவிரி குடிநீரை செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் தங்களது ஊராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வந்துகொண்டு இருக்கிறது. அந்த ஊராட்சி வழியாக தான் ஊராளிப்பட்டி ஊராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் பைப்லையன் மூலம் செல்கிறது.

    இதை செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றநிர்வாகம் ஊராளிபட்டிக்கு செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் பைப் லைனை தடுத்து தங்களது ஊராட்சிக்கே தண்ணீரை திறந்து விடுகிறது என்று நத்தம் யூனியன் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இதை யூனியன் ஆணையாளர்களும், அரசு அதிகாரிகளும் பலமுறை சொல்லியும் செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் கேட்காமல் மீண்டும் அதே பணியை திரும்பதிரும்ப செய்து வருகின்றனர்.

    இதனால் ஊராளிப்பட்டி ஊராட்சி கிராம மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். தண்ணீருக்காக பல விவசாய தோட்டங்களை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே காவிரி கூட்டுக்குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊராளிபட்டி ஊராட்சி கிராம மக்கள் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அனைத்து வீடுகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என பீ.கீரந்தை ஊராட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
    • இது வரை பீ.கீரந்தை ஊராட்சி யில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவில்லை

    சாயல்குடி

    கடலாடி ஒன்றியம் பீ.கீரந்தை ஊராட்சி தலைவராக தொடர்ந்து 2-வது முறையும், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு துணை செயலாளராகவும் இருந்து வருபவர் ஆனந்தம்மாள் அற்புதராஜ்.

    தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செய்த திட்டப்பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

    பீ.கீரந்தை ஊராட்சிக்கு உட்பட்ட உசிலங்குளம் கிராமத்தில் பீ.கீரந்தை வரை ரூ. 66 லட்சத்தில் மெட்டல் சாலை, பி.உசிலங்குளம் கிராமத்தில் உள்ள தெருக்க ளில் ரூ. 10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் செலவில் ஊருணி அமைக்கப்பட்டுள்ளது.

    மயானத்தில் ஆழ்குழாய் ரூ.2 லட்சத்தில் அமைக்கப் பட்டுள்ளது. கைபம்பு அமைக்க ரூ.2 லட்சம், பொது கழிப்பறை அமைக்க ரூ.5 லட்சம், பொது மயானத் திற்கு மெட்டல் சாலை ரூ.13 லட்சத்து 85 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள் ளது.

    பி.உசிலங்குளம் கிராமத்தில் குடிநீர் ஊரு ணிக்கு மெட்டல் சாலை ரூ.10 லட்சத்திலும், சிறு பாலம் ரூ. 9¼ லட்சத்தி லும் அமைக்கப்பட்டுள்ளது. அதே கிராமத்தில் ரூ.2 லட்சத்தில் குடிநீர் பைப் லைன் விஸ்தரிப்பு, ரூ.2 லட்சத்தில் குளியல் தொட்டி, பீ.கீரந்தை ஊராட்சி பூலாங்குளம் கிராமத்தில் குடிநீர் ஊருணியில் ரூ. 1¾ லட்சம் செலவில் படித்துறை மற்றும் ரூ.2 லட்சம் செலவில் கைப்பம்பு அமைக்கப் பட்டுள்ளது.

    பீ.கீரந்தை ஊராட்சி சித்துடையான் கிராமத்தில் ரூ.6 லட்சத்தில் திறந்தவெளி கிணறும், கிராம தெருக்களில் ரூ. 8 லட்சத்தில் பேவர் பிளாக் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. சித்துடையான் கிராமத்தில் கைப்பந்து மைதானம் அமைக்க ரூ.2 லட்சம் செலவிலும், இளம் காளி யம்மன் கோவில் தெருவில் பேவர் பிளாக் சாலை ரூ. 5¾ லட்சம் செலவிலும், அதே கிராமத்தில் பைப் லைன் விஸ்தரிப்பு செய்ய ரூ. 2 லட்சம் செலவிலும் பணிகள் நடைபெற்றுள்ளது.

    புத்தேந்தல் கிராமத்தில் குடிநீர் ஊருணியில் படித்துறை ரூ.1.75 லட்சத்தி லும், ப.கீரந்தை கிராமத்தில் திறந்தவெளி கிணறு ரூ.10 லட்சத்திலும் குடிநீருக்காக பைப்லைன் விஸ்தரிப்பு ரூ.2 லட்சத்திலும், திறந்த வெளி கிணறு பகுதியில் பிளாஸ்டிக் தொட்டி ரூ.6 லட்சத்தில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

    பீ.கீரந்தை ஊராட்சியில் பி.உசிலங்குளம், பீ.கீரந்தை, சித்துடையான், பூலாங்குளம், புத்தேந்தல் ஆகிய கிராமங் களில் அனைத்து வீடுகளுக் கும் தனி நபர் உறிஞ்சி குழி அமைத்து தரப்பட்டுள்ளது. மேலும் பீ.கீரந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பீ.கீரந்தை, பூலாங்குளம், புத்தேந்தல் ஆகிய கிராமங்களில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். இது வரை பீ.கீரந்தை ஊராட்சி யில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவில்லை. கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×