search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை தீவனம்"

    • வருவாய்த்துறையால் வகைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
    • கால்நடைகளுக்கான தீவன தேவை ஓரளவு பூர்த்தியாகிறது.

    அவிநாசி:

    அவிநாசி, சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக மாலை மற்றும் இரவில் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பலத்த மழை கூட பெய்தது. இதனால் ஆங்காங்கே உள்ள சிறிய நீர்நிலைகளில் தண்ணீர் வழிந்தோட துவங்கியிருக்கிறது.இந்நிலையில், கிராமப்புறங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தரிசு நிலங்கள், மேய்ச்சல் நிலம் என வருவாய்த்துறையால் வகைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

    ஏப், மே மாதங்களில் சுட்டெரித்த வெயிலால், தீவனத்தேவையை பூர்த்தி செய்ய கால்நடை வளர்ப்போர் திணற வேண்டியிருந்தது. தற்போது பெய்துள்ள மழையால் செடி, கொடிகள் தழைத்து வளர துவங்கியுள்ளன.நடுவச்சேரி பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த சிலர் கூறுகையில், 'மழையால் செடி, கொடிகள் தழைத்து வளர்ந்துள்ளன.இதனால், கால்நடைகளுக்கான தீவன தேவை ஓரளவு பூர்த்தியாகிறது என்றனர்.

    • அசோலாவை மண்ணில் கலந்து மக்க விடும்போது சிறந்த உயிர் உரமாகவும் செயல்பட்டு மகசூல் அதிகரிக்க உதவுகிறது.
    • கால்நடை வளர்ப்பை பலரும் கைவிடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    திருப்பூர் :

    விவசாயம் சார்ந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. கால்நடைகளுக்கான தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பெருமளவு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.சமச்சீர் உணவு அளிப்பதன் மூலமாகவே கால்நடைகள் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்ற சூழலில், வருவாயில் 70 சதவீதத்தை தீவனத்துக்காகவே செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால் கால்நடை வளர்ப்பை பலரும் கைவிடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    இத்தகைய நெருக்கடியான நிலையில் கால்நடை வளர்ப்போருக்கு வரப்பிரசாதமாக இருப்பது அசோலா தீவனமாகும்.இது கால்நடைகளின் சிறந்த தீவனமாக மட்டுமல்லாமல் தாவரங்களுக்கு உயிர் உரமாகவும், மனிதர்களுக்கு சத்துள்ள உணவாகவும் பயன்படுகிறது. புரதச்சத்து நீரில் வளரும் பாசி வகையை சேர்ந்த அசோலா, மூக்குத்திச் செடி, கம்மல் செடி என பல பெயர்களில் அழைக்கப்படும் நீலப்பச்சை பாசியாகும்.இதனை ஆடு, மாடு, கோழி, முயல், மீன், பன்றி உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் உணவாகப் பயன்படுத்தலாம்.

    அசோலாவை கறவை மாடுகளுக்குத் தீவனமாக கொடுக்கும் போது ஒரு லிட்டர் வரை பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் தரமும் மேம்படுகிறது.ஒரு மாட்டுக்கு ஒரு கிலோ அசோலாவை தீவனமாகக் கொடுக்கும் போது ஒரு கிலோ புண்ணாக்கு கொடுப்பதற்கு சமமாகும்.அசோலாவில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் இதனை தீவனமாக உட்கொள்ளும் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பல்வேறு சத்துக்கள் அடங்கியதாக உள்ளதால் கால்நடைகள் மட்டுமல்லாமல் நாமும் கீரைகளைப் போல அசோலாவைப் பயன்படுத்தி சூப், பொரியல், வடை போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.

    அத்துடன் அசோலாவை மண்ணில் கலந்து மக்க விடும்போது சிறந்த உயிர் உரமாகவும் செயல்பட்டு மகசூல் அதிகரிக்க உதவுகிறது.10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட ஒரு அசோலா தொட்டியில் 15 நாட்களுக்குள் 30 முதல் 40 கிலோ வரை அசோலா உற்பத்தி செய்ய முடியும்.மேலும் 3 ல் 2 பங்கு என்ற வகையில் தொடர்ச்சியாக அறுவடை செய்ய முடியும். இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. எனவே அசோலா வளர்ப்புப் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.இதன்மூலம் கால்நடைகளுக்கான தீவனச்செலவு பெருமளவு குறைவதுடன், பலரும் கால்நடை வளர்ப்பைக் கைவிடும் நிலையைத் தவிர்க்கலாம்.

    ×