search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலிங்வுட்"

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியால் ஆஸ்திராலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும்.
    • ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த அணியாக இருந்தாலும் இங்கிலாந்தின் காலநிலைகள் வேறுபட்டது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியஷிப்பின் இறுதிப்போட்டி ஜீன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தவறவிட்ட இந்தியா இந்த முறை அதை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.

    அதேவேளையில் உலக டெஸ்ட் சாம்பியந்திப்பின் இறுதிப்போட்டிக்கு முதன் முறையாக நுழைந்துள்ள ஆஸ்திரேலியா தனது முதல் முயற்சியிலேயே வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கும்.

    இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிபோட்டியில் யார் ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் காலிங்வுட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    சமீபத்திய பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வலுவான அணியாக காணப்பட்ட இந்தியாவுக்கு இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியால் ஆஸ்திராலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த அணியாக இருந்தாலும் இங்கிலாந்தின் காலநிலைகள் வேறுபட்டது.

    இரு அணிகளும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவதை நாம் காண்போம் என நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த சூழ்நிலையிலும் ரன் குவிக்க கூடிய அபாரமான பேட்ஸ்மேன் விராட் கோலி.
    • அவர் தனது திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    லண்டன்:

    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் காலிங்வுட் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

    விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் தனது திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.

    விராட் கோலி தற்போது அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் ரன் குவிக்க கூடிய அபாரமான பேட்ஸ்மேன் ஆவார்.

    ரிஷப்பண்ட்டும் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் விளையாடும் விதம் அருமையாக இருக்கும். துரதிருஷ்டவசமாக அவர் விபத்தில் காயம் அடைந்துள்ளார். அவரை மீண்டும் களத்தில் காண விரும்புகிறேன். கிரிக்கெட் உலகிற்கு அவர் மிகவும் தேவைப்பட்டவர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விராட்கோலி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் (186 ரன்) அடித்தார். 1205 நாட்களுக்கு பிறகு அவர் டெஸ்டில் செஞ்சுரி அடித்தார். சர்வதேச போட்டியில் அவர் 75 சதம் எடுத்துள்ளார்.

    விராட கோலி 110 சதங்கள் குவித்து டெண்டுல்கரின் 100 சர்வதேச செஞ்சுரி சாதனையை முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருந்தார். தற்போது கோலியின் பேட்டிங் திறமையை காலிங் வுட் பாராட்டி உள்ளார்.

    ×