search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காத்திருப்பு போராட்டம்"

    • ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது.
    • காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் விவசாயிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் பாலுக்கு கொள் முதல் விலை உயர்த்தப் படவில்லை. ஆனால் புண்ணாக்கு, தவிடு, தீவனங்களின் விலை மற்றும் ஆள் கூலி கடுமையாக உயர்ந்துள்ளன.

    ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது. ஐரோப்பி யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலுக்கான உற்பத்தி செலவை அரசே மானிய மாக வழங்குகிறது.

    இவ்வாறான கட்டமைப்பு இங்கு இல்லாததால் விவசா யிகளும், ஆவின் நிறுவ னமும் நலிந்து வருகிறோம்.

    எனவே பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.51-ம் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். நலிந்து வரும் ஆவின் நிறுவனத்தை சீரமைக்க வேண்டும்.

    கூட்டுறவு சங்க செயலர்களை பணிவரன் முறை செய்து உரிய சம்பளம், பணி பாது காப்பு வழங்க வேண்டும்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி காலை 10 மணி முதல் சித்தோடு ஆவின் ஆலை அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். 

    • துணை தலைவர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • துணை தலைவர் விஜயலட்சுமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி ஊராட்சி யில் துணை தலைவராக வருபவர் விஜயலட்சுமி என்பவர் இருந்து வருகிறார். இந்த ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர் சிவராஜ்.

    இவர் துணை தலைவரின் மின்னணு சாவியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும் என கூறி பெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த சாவியை துணை தலைவர் அவரிடம் பலமுறை கேட்டும் திரும்ப தர வில்லை.

    இந்த நிலையில் ஊராட்சி 9-வது நிதி வங்கி கணக்கில் உள்ள தொகையினை துணை தலைவருக்கு தெரியப்படுத்தாமல் ஒப்பந்ததாரருக்கு பண பரிவத்தினை செய்துள்ளார்.

    மேலும் துணை தலைவர் விஜயலட்சுமி மின்னணு சாவியை கேட்டார். ஆனால் துணை தலைவரை அலுவ லத்துக்குள் அனுமதிக்காமல் ஊராட்சி செயலாளர் சிவராஜ் அலுவலகத்தினை பூட்டி விட்டு சென்று விட்டதாகவும் கூறப்படு கிறது.

    இதை கண்டித்து துணை தலைவர் அலுவலகத்தின் முன்பு திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதை பற்றி அறிந்ததும் சென்னிமலை பி.டி.ஓ. குணசேகரன் மற்றும் போலீசார் வாய்ப்பாடி ஊராட்சி அலுவலகம் சென்று போரட்டத்தில் ஈடுபட்ட துணை தலைவர் விஜயலட்சுமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதை தொடர்ந்து துணைத் தலைவர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.

    • விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • அனைவருக்கும் எவ்வித நிபந்தனையின்றி நீல நிற அட்டை வழங்க வேண்டும்.

    விக்கிரவாண்டி, நவ.10- –

    விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழரசி உட்பட 90பேர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி பி.டி.ஓ.,அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .பின்னர் அவர்கள் பி.டி.ஓ., சுமதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்:- மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் எவ்வித நிபந்தனையின்றி நீல நிற அட்டை வழங்க வேண்டும். தேசிய வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதத்தில் 2 வாரம் பணி அளித்து, அவர்களுக்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து முழு ஊதியம் ரூ. 281 வழங்கிட வேண்டும்.

    அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தில் வீடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் வறுமை கோட்டின் கீழ் சேர்க்க வேண்டும். விக்கிரவாண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறானாளிகள் தன்னிச்சையாக சென்று வர சாய்தள வசதி அல்லது லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர். விக்கிரவாண்டி ஒன்றியம் கொங்கராம்பூண்டியில் நேற்று நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பங்கேற்ற அதிகாரிகள் சென்றதால் ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு 3 மணி நேரம் அமர்ந்து காத்திருந்துமனு அளித்து சென்றனர்.

    ×