search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதலியை கொன்ற"

    • அன்கீத்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
    • கொலை செய்து வேறு இடத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை கந்தாம்பாளையத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளியின் காம்பவுண்ட் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி நிர்வாண நிலையில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் பிணமாக கிடந்தது உத்திரபிரதேச மாநிலம் மெரகாபாத் மாவட்டம் முஜாப்பூர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா காதூன் (36) என தெரியவந்தது.

    மேலும் ரேஷ்மா காதூனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளதும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று ரேஷ்மா காதூன் தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

    அப்போது அதே மாவட்டத்தை சேர்ந்த அன்கீத்குமார் (24), ரேஷ்மா காதூனுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை கந்தாம்பாளையத்தில் உள்ள நூல் மில்லில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.

    இந்நிலையில் ரேஷ்மா காதூனுக்கும், அன்கீத்குமாருக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஏற்பட்ட தகராறில் அன்கீத்குமார் ரேஷ்மாகாதூனை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.

    கொலையை மறைக்க ரேஷ்மா காதூனை நிர்வாணமாக்கி உடலை அருகே உள்ள தனியார் பள்ளி காம்பவுண்டிற்குள் வீசி விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் தலைமறைவான அன்கீத்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் பெருந்துறை பகுதியில் பதுங்கியிருந்த அன்கீத்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் ரேஷ்மா காதூனை கொலை செய்து வேறு இடத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து கொலை செய்தல், கொலையை மறைத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து அன்கீத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தலைமறைவாகி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு கொலையாளி பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×