search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்களுக்கான"

    • மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தலின்படி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம் இணைந்து நடத்திய பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 10, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக மக்கள்குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்தும், போட்டித்தேர்வுகள் குறித்தும், அரசு வேலை வாய்ப்புகள் குறித்தும், தன்னார்வ பயிலும் வட்டங்கள் குறித்தும், முப்படைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், தொழிற்கல்வி குறித்தும் மற்றும் வங்கி கடனுதவி திட்டங்கள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    மேலும் வாழ்க்கை வழி காட்டி நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ராதிகா, மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
    • போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

    ஈரோடு:

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாட்டிற்காகப பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்திப்பரிசு கள் வழங்கப்படுகிறது.

    இதையொட்டி அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்- அமை ச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி வரும் 9-ந் தேதி, 10-ந் தேதி பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.

    இப்போட்டிகள் கலெக்டர் அலுவலக 2-ம் தளம் கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது. பள்ளிப்போட்டி காலை 10 மணி முதல், கல்லூரிப் போட்டி மதியம் 2 மணி முதல் நடைபெறும்.

    மாணவர்கள் பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்புகளை அவரவர்கள் பயிலும் பள்ளித் தலைமை யாசிரியர், கல்லூரி முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

    மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம் , 3-ம் பரிசாக ரூ.2ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படும்.

    மேலும் பள்ளி மாண வர்களுக்கான பேச்சு ப்போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள், அரசு ப்பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2ஆயிரம் வீதம் வழங்க ப்படும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    ×