search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைத்திருவிழா போட்டி"

    • ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும்போது அதனை பார்த்து கொண்டிருப்பார்.
    • ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 42) இவரது மகள் ஜெயமித்ரா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது சகோதரி லீனா (வயது 13) அதே பகுதியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார் இவரது தம்பி மெதுஷ் (வயது 12) இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும்போது அதனை பார்த்து கொண்டிருப்பார். அவருக்கு நாதஸ்வரம் எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

    இதனால் தனது பெற்றோரிடம் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். ஆரம்பத்தில் மறுத்த அவர்கள் பின்பு கற்றுக்கொடுக்க தொடங்கினர்.

    இதனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள பயிற்சி எடுத்தார். அதன் பிறகு 2019 ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்காததால் வீட்டில் முழு மூச்சுடன் நாதஸ்வரம் கற்றுக்கொண்டார் சிறப்பாக வாசித்தார்.

    கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது 10 ம் வகுப்பு படித்து வருவதால் தன்னுடைய கவனத்தை படிப்பில் செலுத்தினார். அப்போது தான் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனால் ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார்.

    இந்த நிலையில் கச்சிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமியின் சீரிய முயற்சியில் அப்பள்ளியின் மாணவி ஜெயமித்ரா சென்னை மேலப்பாக்கம் பகுதியில் கடந்த 21-ந்தேதி மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் நாதஸ்வர போட்டியில் கலந்துகொண்டார்.

    இதல் வெற்றி பெற்று 2-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் பள்ளியின் மாணவர்களின் முன்னிலையில் நாதஸ்வர போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

    • இசை, நடனங்களில் அசத்தினர்
    • ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஓட்டேரியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்தி றனை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழா இன்று நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் நந்தகுமார் எம்.எல்.ஏ, வேலூர் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழகம் முழுவதுமிருந்து அரசு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    அவர்கள் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், தமிழ்மொழியின் சிறப்பு ஆகியவைகள் குறித்து ஆடல், பாடல், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டினர்.

    மேலும் விவசாயத்தை காக்கும் வகையில் ஆடல்கள், சிறுதானிய தமிழ் பாரம்பரிய உணவுகளான சாமை, தினை, கேழ்வரகு ஆகியவை களின் நன்மைகள் பிட்சா, பர்கர் போன்றவை களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் வில்லுபாட்டு மூலம் விளக்கினர்.

    மேலும் கும்மியாட்டம், டிரம்ஸ் இசைக்கருவி இசைத்தல், தப்பு இசை ஆகியவைகளும் இசைத்து காட்டி மாணவர்கள் தனித்திறனை வெளிப்ப டுத்தி அசத்தினார்கள்.

    விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், கலையில் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் இக்கலை ப்போட்டிகள் நடக்கிறது.

    மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டி சிறந்து விளங்கினாலும் இது போன்ற கலைகளிலும் தனித்திறனை வெளிப்ப டுத்தும் வகையில் செயல்பட வேண்டும் தமிழகம் கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது அதை போல் கலைகளிலும் சிறந்து விளங்கவே இது போன்ற போட்டிகள் நடக்கிறது என பேசினார்.

    ×