search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கறுப்பு பணம்"

    தெலுங்கானா எம்.பி.நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.60 கோடி கறுப்பு பணம் சிக்கியுள்ளது. #TelanganaMP #IncomeTax

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் சீனிவாச ரெட்டி எம்.பி.

    இவர் “ராகவ்கன்ஸ்ட் டிரக்கன் குரூப்” எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது சகோதரர் பிரசாத் ரெட்டி. அந்த கட்டுமான நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக உள்ளார்.

    அந்த கட்டுமான நிறுவனத்தில் பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடப்பதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் ராகவ் கட்டுமான நிறுவனத்தில் ஐதராபாத் அலுவலகத்தில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அந்த ஆவணங்கள் அனைத்தும் தனிப்படை அமைத்து ஆய்வு செய்யப்பட்டன.


    அந்த ஆவணங்கள் மூலம் ராகவ் கட்டுமான நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்தது. அது மட்டுமின்றி பல கோடி ரூபாய் கருப்புப் பணம் அந்த நிறுவனத்தில் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது.

    அந்த கருப்புப் பணம் பற்றி அதிகாரிகள் குழு தனியாக ஆய்வு செய்தது. அப்போது ராகவ் கட்டுமான நிறுவனத்தில் ரூ.60 கோடி அளவுக்கு கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த ரூ.60 கோடி கருப்புப் பண ஆவணங்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ராகவ் நிறுவனம் எந்தெந்த பணிகளுக்கு கருப்பு பணத்தை பயன்படுத்தி உள்ளது என்ற சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சீனிவாச ரெட்டி எம்.பி.யிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #TelanganaMP #IncomeTax

    நைஜீரியா முன்னாள் அதிபர் அபசா சுவிஸ் வங்கியில் பதுக்கிய ரூ.2 ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
    அபுஜா:

    நைஜீரியாவில் கடந்த 1993 முதல் 1998-ம் ஆண்டு வரை அபசா அதிபராக இருந்தார். அவர் தனது பதவி காலத்தில் பல ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை பதுக்கினார்.

    அவற்றை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்தார். இந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    இந்த விவகாரம் நைஜீரியாவில் பெரும் சர்ச்சையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முகம்மது புகாரி சுவிட்சர்லாந்தில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

    அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகி விட்டார். அதை தொடர்ந்து கறுப்பு பணத்தை மீட்பது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி அதிகாரிகளுடன் நைஜீரிய அரசு பேச்சு நடத்தியது.

    அதனை தொடர்ந்து உலக வங்கி மேற்பார்வையில் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி நைஜீரிய அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    அதை நஜீரியாவில் வசிக்கும் 3 லட்சம் குடும்பங்களுக்கு சமமாக பிரித்து வழங்க அரசு முடிவு செய்தள்ளது.
    சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் அல்ல மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #SwissBank #BlackMoney
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் அதிகளவில் பணம் பதுக்கல் செய்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

    பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை.

    இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளது. அதாவது சுமார் ரூ.7 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது.

    மேலும், ரூ.3,200 கோடி இந்திய ரூபாயாக வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளாக செலுத்தப்பட்டுள்ளது. பிற வங்கிகள் மூலமாக சுவிஸ் வங்கிகளில் போடப்பட்ட தொகை ரூ.1,050 கோடி. பங்குகள் உள்ளிட்ட பிற வகைகளில் செலுத்தப்பட்ட தொகை ரூ.2,640 கோடி என சில புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப் பணம் பதுக்கி இருந்தால் கண்டறியப்படும். சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என பதிவிட்டுள்ளார். #ArunJaitley #SwissBank #BlackMoney
    ×