search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்த்தார்பூர்"

    பாகிஸ்தானில் நடந்த விழாவின்போது காலிஸ்தான் ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். #Sidhu
    பாகிஸ்தானின் கர்தார்பூரில், சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் அடக்கஸ்தலத்தில் தர்பார் சாகிப் குருத்வாரா கட்டப்பட்டு உள்ளது. இந்த நகரை இந்தியாவின் பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள தேரா பாபா நானக் நகருடன் இணைக்கும் விதமாக 4.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரு நாடுகளுக்கும் இடையே இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள வசதியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று கர்தார்பூர் நகரில் நடந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வா, இந்தியாவின் மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் புரி மற்றும் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டிப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர் கோபால் சிங் சாவ்லாவுடன், சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சித்துவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாவ்லா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம், சித்துவுக்கு எதிராக மீண்டும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை விமர்சித்துள்ள பாஜக, ‘‘பாகிஸ்தான் மண்ணில் இது போன்ற தவறான யுக்திகளுடன் செயல்படுவதை புறந்தள்ளிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளது.
    கர்த்தார்பூர் பாதை அடிக்கல்நாட்டு விழாவில் இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீர் பிரச்சனையை மையப்படுத்தி பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. #PakistanPM #piousoccasion #IndiaMEA
    புதுடெல்லி:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் கர்த்தார்பூர் தனிப்பாதைக்கு பாகிஸ்தானில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான், நமக்குள் இருக்கும் ஒரே பிரச்சனை காஷ்மீர் பிரச்சனைதான். இதை தீர்ப்பதற்கு இருநாட்டிலும் சரியான தகுதி படைத்த தலைவர்கள் இருந்தால் போதும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சீக்கியர்களின் நீண்டகால கோரிக்கையான கர்த்தார்பூர் தனிப்பாதை அமைக்கும் பக்திசார்ந்த விழாவின்போது இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை குறிப்பிட்டு தேவையில்லாத வகையிலும், அரசியலாக்கும் முறையிலும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ள கருத்து எங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒப்புக்கொள்ளப்பட்ட சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்றுவதுடன் தங்கள் நாட்டில் இருந்து கட்டவிழ்த்து விடப்படும் எல்லைதாண்டிய பயங்ரவாதத்தை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான, நம்பகமான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம் எனவும்  வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistanPM #piousoccasion #IndiaMEA 
    அமைதிக்காக பாடுபடும் நவ்ஜோத் சிங் சித்துவை இந்தியாவில் சிலர் விமர்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை. பாகிஸ்தான் தேர்தலில் நின்றாலும் சித்து வெற்றி பெறுவார் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். #Sidhu #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் கர்த்தார்பூர் தனிப்பாதைக்கு பாகிஸ்தானில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்தியாவில் இருந்து வந்துள்ள மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி, பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான் அமைதிக்காக பாடுபடும் நவ்ஜோத் சிங் சித்துவை இந்தியாவில் சிலர் விமர்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை. பாகிஸ்தான் தேர்தலில் நின்றாலும் சித்து வெற்றி பெறுவார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-

    இந்த விழாவின்போது நான் கண்ட மகிழ்ச்சியானது மதினா நகரை பார்க்க முடியாமல் எல்லைப்பகுதியில் 4 கிலோமீட்டர் தூரத்தில் காத்திருந்து, பின்னர் மதினாவை காணும் வாய்ப்பு கிடைத்த முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்கு ஒப்பானதாகும். இந்த மகிழ்ச்சியை இந்தியாவில் உள்ள சீக்கிய மக்கள் இன்று அடைந்துள்ளனர்.


    நமக்குள் இருக்கும் ஒரே பிரச்சனை காஷ்மீர் பிரச்சனைதான். இதை தீர்ப்பதற்கு இருநாட்டிலும் சரியான தகுதி படைத்த தலைவர்கள் இருந்தால் போதும். அப்படி பிரச்சனை தீர்ந்து நமது உறவுகள் பலப்படும்போது நமது சக்தியும், வீரியமும் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

    எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதற்காக இந்தியாவில் சித்துவை ஏன் விமர்சிக்கிறார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை. அவர் அமைதியைப் பற்றிதான் பேசினார். அவர் இங்கு வந்து தேர்தலில் போட்டியிடலாம், அவர் வெற்றி பெறுவார். நமது இருநாடுகளுக்கு இடையில் நீடித்த நட்புறவு உருவாகும் வகையில் சித்து இந்தியாவின் பிரதமர் ஆகும் நாளுக்காக நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #Sidhu #ImranKhan
    ×