என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கபாடி"
- தென்னிந்திய அளவிலான கபாடி போட்டியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்
- 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி நடைபெறுகிறது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆ.கொக்குளம் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபாடி போட்டி நடந்தது.
33 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 133 அணிகள் பங்கேற்கின்றன.
போட்டியை முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அவருக்கு கிராம மக்கள் சார்பில் மாலை அணிவித்து வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.
முதலாவதாக ஆ.கொக்குளம் மற்றும் கிண்ணிமங்கலம் அணியினர் பங்கேற்ற கபடி போட்டி நடந்தது.நாளை காலை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. முதல் பரிசாக ரூ.ஒரு லட்சமும், 2-ம் பரிசாக ரூ.80 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 60 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
போட்டியை காண சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்