search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் மனைவி படுகாயம்"

    நாமக்கல் அருகே விபத்தில் சிக்கிய கணவன், மனைவியை கலெக்டர் ஆசியா மரியம் மீட்டு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள களங்காணியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 50). இவரது மனைவி நிர்மலா (45). இவர்கள் ரெட்டிப்புதூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் 12.30 மணி அளவில் இருவரும் கடையில் இருந்து ஒரு மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    களங்காணியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், இவர்களது மொபட் மீது மோதியது. இதில் கங்காதரன், நிர்மலா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக ராசிபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை பார்வையிட்ட கலெக்டர் ஆசியா மரியம், சேந்தமங்கலத்தில் நடக்கும் பயிற்சியை பார்வையிட சென்றார்.

    அந்த நேரத்தில் விபத்து நடந்ததால் உடனடியாக மீட்பு பணியை முடுக்கிவிட்ட கலெக்டர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டார். 108 ஆம்புலன்சு வர சற்று தாமதம் ஆனதால், செய்தி மக்கள் தொடர்பு துறையினர் சென்ற ஜீப்பில், படுகாயம் அடைந்த இருவரையும் ஏற்றி, உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

    அங்கு விபத்தில் படுகாயம் அடைந்த கங்காதரன் மற்றும் அவரது மனைவி நிர்மலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது 100 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்த விபத்தில் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    கோவை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 48). இவரது மனைவி ஹேமா(42). நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிள் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே சென்று கொண்டு இருந்தபோது வெங்கடேஷ் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து 100 அடி பள்ளத்துக்குள் பாய்ந்தது. விபத்தில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வெலிங்டன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த கணவன்-மனைவி இருவரையும் கயிறு கட்டி மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கணவன்-மனைவி இருவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மீட்பு பணி காரணமாக குன்னூர்-மேட்டுப்பாயம் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×