search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் மனைவி காயம்"

    பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவன்-மனைவி, 2 குழந்தைகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கிராஜ் (வயது 34). இவரது மனைவி வள்ளியம்மாள் என்ற சுசிலா (30). இவர்களுக்கு ஹர்ஷினி (8), விக்னேஷ்வரன் (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று கணவன், மனைவி, குழந்தைகள் ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளில் சிங்கை, அடையகருங்குளம் விலக்கு அருகே சென்று கொண்டு இருந்தனர். 

    அப்போது நெல்லையில் இருந்து பாபநாசத்தை நோக்கி சென்ற அரசு பஸ் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இசக்கிராஜ், சுசிலா, ஹர்ஷினி, விக்னேஷ்வரன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து சிங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அணைப்பாளையத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கணவன்- மனைவி படுகாயம் அடைந்தனர்.
    க.பரமத்தி:

    சின்னதாராபுரம் மருதம் கார்டனை சேர்ந்தவர் கணேசன்(வயது 55). இவரது மனைவி செல்வி(50). இவர்களது மகன் ராஜேஷ்குமார்(27). இவர்கள் 3 பேரும் ஒரு காரில் கரூரில் இருந்து சின்னதாராபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அணைப்பாளையம் என்ற இடத்தில் கார் சென்று கொண்டு இருந்தபோது ராஜேஷ்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் கணேசனும், செல்வியும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 பேரும் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜேஷ்குமார் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

    இது குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×