search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையில் தீ விபத்து"

    • ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஓச்சேரி சாலையில் மின் விளக்கு அலங்காரம் செய்யும் கடை இயங்கி வந்தது. இந்தக் கடையில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து மள மளவென எரிந்து கொண்டிருந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த விபத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான மின் அலங்கார சாதனங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைகளுக்கு தீ பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • தீவிபத்துக்கான காரணம் குறித்து பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பூர்:

    பிராட்வே, பூக்கடை பகுதி வெங்கடாசல தெருவில் பூந்தமல்லியை சேர்ந்த இம்ரான் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை கடையை பூட்டி தன்னுடைய உறவினர் திருமணத்திற்காக பழனி சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை இம்ரானின் பிளாஸ்டிக் கடையில் திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை, ஐகோர்ட்டு ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. அருகில் உள்ள மற்ற கடைகளுக்கு தீ பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் குறித்து பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×