search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைஅடைப்பு"

    • காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது
    • தஞ்சை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்திற்கு உரிய அளவு காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும் தண்ணீர் திறந்து விட எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு இன்று காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் மற்றும் பல்வேறு கட்சி , இயக்கத்தினர், அமைப்பினர், தொழில் சங்கத்தினர், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.

    இதையடுத்து தஞ்சை காந்திஜி ரோடு எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நீர் திறந்திட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்திரல் தி.மு.க. மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், துணை செயலாளர் கனகவல்லிபாலாஜ், முன்னாள் கவுன்சிலர் சதாசிவம், நிர்வாகிகள் 48-வது வார்டு பிரதிநிதி செழியன், 49-வது வார்டு சண்முகம், ராஜா, காங்கிரஸ் வட்டார தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மோகன்ராஜ், வயலூர் ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, துணை செயலாளர் சக்திவேல், பொருளாளர் பாலசுப்பிரமணியன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட செயற்குழு மனோகரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் சொக்காராவி, வெற்றிவேந்தன், ம.தி.மு.க. மாவட்டசெயலாளர் தமிழ்செல்வன், மாநகர செயலாளர் துரைசிங்கம், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி , செயலாளர் முருகேசன், அவைத்தலைவர் திலகர், பொருளாளர் சதீஷ்பாலாஜி, நகர பொருளாளர் செல்வம், நகர தலைவர் வாசுதேவன் , நகர செயலாளர் துரைகந்தமுருகன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் சூரியகுமார், மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ஆனந்த், அண்ணா திராவிடர் மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் இருதயராஜ், விடுதலை தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன், ஏ.ஐ.டி.யூ.சி தேசிய நிர்வாகக்குழு சந்திரகுமார், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட தலைவர் சேவையா, சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, நிர்வாகிகள் ராஜா, பேர்நீதி ஆழ்வார், மக்கள் கலை இலக்கியம் ராவணன், மக்கள் அதிகாரம் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஜெய்னூலாப்தீன், மனித நேய மக்கள் கட்சி பாதுஷா, விவசாய சங்க நிர்வாகி சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×