search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா விற்பணை"

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா சப் இன்ஸ்பெக்டர் தீபன் சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று பூண்டி கிராமம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள பச்சையம்மன் கோயில் அருகே நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்பவர் என்று தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
    • போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை

    ஆற்காடு:

    ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்காணித்து கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த ஆற்காடு மாசா பேட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 29), ஆற்காடு வேலூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு (27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    அதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் பிரபு ஆகியோரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சிறையில் உள்ள 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணை வழங்கப்பட்டது.

    • ரோந்துப் பணியின் போது சிக்கினர்
    • சிறையில் அடைப்பு

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாசன் தலைமையிலான போலீசார் நேற்று ஷா நகர், ஹபில்ஸ் பேட்டை, பழனிபேட்டை மற்றும் கிருஷ்ணாம்பேட்டை பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது பழனி பேட்டை எஸ்.ஆர்.கேட் பகுதியில் உருட்டுக் கட்டை வைத்து க்கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த நபரை கண்ட சப்-இன்ஸ்பெக்டர் தாசன் அந்த நபரை பிடித்து விசாரித்தார்.

    அவர் ஷா நகர் பகுதியை சேர்ந்த சுனில் (வயது 21) என்பது தெரியவந்தது. இதே போன்று ஹபில்ஸ் பேட்டை ரெயில்வே குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது சந்தே கிக்கும் வகையில் நின்றிருந்த வெங்கடேசபுரம் பகுதியை ரூபேசிடம் (22) சோதனை செய்தனர்.

    இருவரிடமும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×