search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டெடுப்பு"

    ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், 2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.

    ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்துக்கு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை.

    ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை தோல்விகளை சந்தித்ததால், தெரசா மேவின் கோரிக்கையின் பேரில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு முன் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்புகள் அனைத்தும் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் ஓட்டெடுப்பு தெரசா மேவுக்கு கைகொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால் இங்கிலாந்து, ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. #BrexitDeal #TheresaMay
    பிரசல்ஸ்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு நாடாளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.

    அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக் ஸிட்டை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார்.

    இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் நடந்து வரும் ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள தெரசா மே, மாநாட்டுக்கு மத்தியில், ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க்கை சந்தித்து பிரெக்ஸிட் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க டொனால்டு டஸ்க் ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், “பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதிக்குள் வெளியேறியாக வேண்டும்” என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், “இங்கிலாந்து இந்த 2 வாய்ப்புகளையும் தவறவிடும் பட்சத்தில் மே மாதம் 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் அந்நாடு பங்கேற்க வேண்டிய கட்டாயமான சூழல் உருவாகும்.

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஓட்டெடுப்பு வெற்றிகரமாக நடந்து முடியாத பட்சத்தில் பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிப்பது என்பது தாமாகவே சாத்தியமற்றது ஆகும்.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள மற்ற 27 நாடுகளும் ஒருமனதாக இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள்” என கூறினார்.

    இதையடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பு முன்வைத்த 2 வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வதாக தெரசா மே அறிவித்தார். இது குறித்து அவர், “ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டுமென மக்கள் வாக்களித்த 3 ஆண்டுகளுக்கு பிறகு, அவர்களை ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போடுங்கள் என கூறுவது தவறானது என உறுதியாக நம்புகிறேன்” என் றார்.

    இதன் மூலம் தெரசா மே, அடுத்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்துவார் என தெரிகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த அனுமதிக்க முடியாது என சபாநாயகர் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். #BrexitDeal #TheresaMay #JohnBercow
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது.

    ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்ஸிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது பெரும்பான்மையான எம்.பி.க்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

    அதேபோல், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறார்கள்.



    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கைவிரித்துவிட்டது. எனவே எம்.பி.க்களை சமாதானம் செய்யும் வகையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை தெரசா மே கொண்டுவந்தார்.

    அதனை தொடர்ந்து, கடந்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த திருத்தப்பட்ட ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. எனினும் அந்த ஒப்பந்தத்தையும் எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டனர்.

    அதேசமயம், பிரெக்ஸிட் நடவடிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ், அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பதை தடுக்கவும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு உரிய மரியாதை அளிக்கவும் இந்த நடவடிக்கை அத்தியாவசியமாகி உள்ளது” என்றார்.

    மேலும் அவர், “எம்.பி.க்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வராத நிலையில் ஏற்கனவே 2 முறை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஓட்டுபோடும்படி அவர்களை கேட்க முடியாது” என கூறினார்.

    சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவு தெரசா மேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

    இதற்கிடையில், சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மந்திரி சபையை கூட்டி தெரசா மே அவசர ஆலோசனை நடத்தினார். #BrexitDeal #TheresaMay #JohnBercow 
    ×