என் மலர்
நீங்கள் தேடியது "ஒற்றுமை பேரணி"
- அலங்காநல்லூரில் காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை பேரணி நடந்தது.
- வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
அலங்காநல்லூர்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழிப்பு ணர்வு பேரணி மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பில் அலங்காநல்லூர் வட்டார தலைவர் சுப்பாராயலு ஏற்பாட்டில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
வட்டாரத் தலைவர்கள் காந்தி, சண்முகசுந்தரம், பழனிவேல், குருநாதன், சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயமணி, திலகராஜ், முருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் செல்லப்பா சரவணன், சோனை முத்து, முத்து, நகர் தலைவர்கள் சசிகுமார், வைரமணி, முத்துப்பாண்டி, முருகானந்தம், உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர், கேட்டுக்கடை சந்திப்பில் இருந்து அம்பேத்கர் பஸ் நிலையம் வரை இந்த ஒற்றுமை பேரணி நடந்தது.






