search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரு கோடி ரூபாய் நிதி"

    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணத்துக்கு டெல்லி போலீசார் ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #DelhiPolice
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 350க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.



    இந்நிலையில், கேரளா வெள்ள நிவாரணத்துக்கு டெல்லி போலீசார் ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புக்கு டெல்லி போலீசார் ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளோம். டெல்லி போலீசில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடம் இருந்து இந்த தொகை பெறப்பட்டு பிரதம மந்திரி நிவாரண நிதியில் இந்த தொகை சேர்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #DelhiPolice
    ×