search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐம்பொன் சிலைகள்"

    • மிளகாய் பொடி தூவி சென்ற கும்பலுக்கு வலை வீச்சு
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் பழமைவாய்ந்த 'பூண்டி பொன்னெழில்நாதர் ஜீனாலயம் உள்ளது.

    கோவில் பூட்டை உடைத்து கொள்ளை

    இக்கோவில் தலைவராக அப்பாண்டை ராஜ், செயலாளராக நேமிராஜன், பொருளாளராக அசோக்குமார் உள்ளனர். தினசரி கோவிலில் பூஜை முடிந்த பிறகு இரவு நடையை சாத்திவிட்டு செல்வது வழக்கம்.

    அதன்படி சம்பவத்தன்று இரவு பொருளாளர் அசோக்குமார் கோவில் கதவை மூடிவிட்டு சென்றுள்ளார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அங்கிருந்த 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 1½ அடி உயரமுள்ள அனந்ததீர்த்தங்கரர் உள்பட 7 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    மோப்ப நாய் தங்களை கண்டுபிடிக்காமல் இருக்க, கோவில் முழுவதும் மிளகாய் பொடியை கொள்ளையர்கள் தூவி விட்டு சென்றுள்ளனர்.

    இந்நிலையில் காவலாளி நேற்று காலை கோவில் நடையை திறக்க சென்றார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் நிர்வாகிகளுக்கும், தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

    தடயங்கள் சேகரிப்பு

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் , இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் உட்பட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். திருவண்ணாமலையில் இருந்து கைரேகை நிபுணர் தடயங்களை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை குறித்து கோவில் நிர்வாகிகள் புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    • சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவிலில் ரவீந்திரநாத்குமார் எம்.பி. சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.
    • அதிமுகவில் என்ன மாற்றங்கள் வேண்டு மானாலும் நிகழலாம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவிலில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். கோயிலில் அனைத்து சன்னதிகளிலும் அர்ச்சனை செய்து வழிப்பட்ட ரவீந்திர நாத்குமார், தொடர்ந்து தருமபுர ஆதனத்திடம் ஆசி பெற்றார்.

    பின்னர் செய்தியா ளர்களிடம் அவர் கூறுகையில், திருச்சி மாநாடு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒன்றரை கோடி தொண்டர்கள் என்ன நினைத்தார்களோ அது நடந்துள்ளது.

    அ.தி.மு.க பொதுச்செ யலாளர் பிரச்சனை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதே பொதுக்குழு தான் ஒருங்கிணைப்பாளரையும் தேர்ந்தெடுத்தது.

    அதிமுகவிலிருந்து யார், யாரெல்லாம் வெளியே சென்றார்களோ அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.

    இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான். எனது காரில் அதிமுக கொடியை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்றால் ஒன்றை கோடி தொண்டர்களும் பயன்ப டுத்தக் கூடாது என்று தான் அர்த்தம். அதிமுக உட்க்கட்சி விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வில்லை.

    சீர்காழி சட்டநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் அனைத்தும் தருமையா தினத்தின் பாதுகாப்பில் இருக்க அரசு நடவடிக்கை வேண்டும்பாராளுமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ். , இ.பி.எஸ் இணைந்து நிற்பதற்கான சாத்தியம் உண்டா என்ற கேள்விக்கு, பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடங்கள் உள்ளன அதற்குள் அதிமுகவில் என்ன மாற்றங்கள் வேண்டு மானாலும் நிகழலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
    • இந்து சமய அறநிலையத்துறை 6 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து கண்டெடுக்கப்பட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் திருப்பணிகள் நிறைவு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் 16 ம் தேதி யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் ,55 பீடம் மற்றும் 462 செப்பேடுகள், மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

    இதனை அடுத்து ஐம்பொன் சிலைகளும் மற்றும் செப்பேடுகள் கோயிலின் பாதுகாப்பு அறையில் வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.

    17ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை 6 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது இதுவரை தமிழ்நாட்டில் ஓலை சுவடியில் எழுதிய பதிகங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் முதன்முறையாக அதிக அளவு பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டு தற்போது இங்கு சீர்காழி தான் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஐம்பொன் சிலைகள் கோயி லில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு துப்பாக்கி ஏந்திய 2 அடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு கருதி கூடுதலாக இரும்பு கிரில் கேட் பொருத்தப்பட்டுள்ளதை மயிலாடுதுறை மாவட்ட (பொறுப்பு) காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கண்டார்.

    அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், புயல்.பாலசந்திரன், தனிப்பிரிவு ஆய்வாளர் சதீஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சட்டை நாதர் சுவாமி கோயிலில் விலை மதிக்க முடியாத ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளை கிடைத்துள்ளன.
    • கோயிலில் வைத்து பாதுகாத்து அருங் காட்சியகம் அமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற உறுப்பினர்களான முழுமதி இமயவரம்பன், ஜெயந்தி பாபு, நித்யாபால முருகன்,கலைச்செல்வி மதியழகன், ரம்யா தன்ராஜ்,வள்ளிமுத்து, ரேணுகாதேவி, சூரியபிரபா ,ரமாமணி, ராஜேஷ், பாலமுருகன், ராஜசேகர் ஆகிய 12 பேர் தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரியா சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர்.

    பின்பு நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டை நாதர் சுவாமி கோயிலில் விலை மதிக்க முடியாத ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளை கிடைத்துள்ளன.

    இதனை கோயிலில் வைத்து பாதுகாத்து அருங் காட்சியகம் அமைக்க வேண்டும்.

    பக்தர்கள் வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வருகிற மே 24ஆம் தேதி நடைபெற இருப்பதால் கோயில் பகுதியில் குப்பைகள்அ திகளவு குவிந்து கிடக்கிறது.

    இதனை நகராட்சி நிர்வாகம் தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் துப்புரவு பணிகளை 12 நகர்மன்ற உறுப்பினர்கள் சேர்ந்து தங்களது சொந்த செலவில் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

    ×