search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்பட்டு சாவு"

    • லட்சுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
    • பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி 2-வது மெயின் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (29). கட்டிட தொழிலாளி. இவரது தாய் லட்சுமி (48). ராஜேந்திரனின் தங்கை ரேவதி. அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி ரேவதி தனது குழந்தைக்கு பால் காய்ச்சுவதற்காக சமையல் அறைக்கு சென்று லைட் போடுவதற்காக சுவிட்சை போட்டுள்ளார்.

    அப்போது ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டிருந்ததால் லைட் சுவிட்சை போட்டவுடன் சமையல் அறை முழுவதும் தீப்பிடித்துள்ளது.

    இதனால் அலறி துடித்த ரேவதியை காப்பாற்ற சென்ற அவரது தாய் லட்சுமி, உறவினர் கணேசன் ஆகியோர் மீதும் தீப்பிடித்தது.

    உடனடியாக அக்கம்ப க்கத்தினர் 3 பேரையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் உயர் சிகிச்சை க்காக 3 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி, கணேசன் ஆகியோர் சிகிச்சை முடிந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினர்.

    ரேவதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் லட்சுமிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திடீரென மனோஜ்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
    • பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கே.ஜி.வலசு, மேற்கு தலவுமலை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் 2-வது மகன் மனோஜ்குமார் (20). டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டோர் இன்சார்ஜாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் மனோஜ்குமாருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு சரியாக சாப்பிட முடியாமல் உடல் எடை குறைந்தது.

    இதனையடுத்து அவர் தான் வேலை பார்த்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது குடல் பகுதியில் புண் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டார்.

    பின்னர் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மனோஜ்குமாருக்கு கல்லீரல் பாதிப்பு மற்றும் தைராய்டு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    மருத்துவரின் அறிவுரையின் பேரில் ஈரோட்டில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனோஜ்குமார் சேர்ந்தார்.

    இந்நிலையில் திடீரென மனோஜ்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மனோஜ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×