என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏமாற்றிய பெண்"
- திருமணம் செய்து வாலிபரை ஏமாற்றிய பெண் முதல் நாளிலேயே மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஈரோடு மாவட்டம் ஆய்வுக்கூடல் சக்தி நகரை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன் (35). இவர் சிவகாசியில் மீனம்பட்டியை சேர்ந்த திருமண புரோக்கர் ராணி என்பவர் மூலம் வரன் பார்த்தார்.
இவர் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் ஜெயலட்சுமி (28) என்பவரை திருமணத்திற்காக நவநீத கிருஷ்ணன் பெண் பார்த்தார்.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிவகாசி மீனம்பட்டியில் உள்ள கோவிலில் நவநீத கிருஷ்ணன்-ஜெயல ட்சுமிக்கு திருமணம் நடந்தது. அதன்பின் இருவரும் ஈரோட்டிற்கு சென்றனர்.
திருமணமான மறுநாள் ஜெயலட்சுமி தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து நவநீத கிருஷ்ணன் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது ஜெயலட்சுமி அங்கிருந்து திடீரென மாயமானார்.
சிவகாசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. திருமணம் செய்து தன்னை ஏமாற்றியதாக நவநீத கிருஷ்ணன் சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்