search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.எல்.சி."

    • வேலி அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
    • விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கடலூர்:

    சேத்தியா தோப்பு அருகே என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் வேலி அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக் கத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை சேத்தியாதோப்பு அருகே உள்ள கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழகன், ஊ. ஆதனூர், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, வி. சாத்தப்பாடி உள்ளிட்ட 7 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. கடந்த 2 மாதத்திற்கு முன் வளையமாதேவியில் கையகப்படுத்திய நிலத்தில் என்.எல்.சி. சார்பில் புதிய பரவனாறு வெட்டப்பட்டது.

    புதிய பரவனாறு வெட்டும் பணியின் போது குறுவை சாகுபடி நெற் பயிர்களை அழித்து பணியை செய்ததால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதர வாக என்.எல்.சி. நுழைவு வாயில் முன்பு பா.ம.க. சார்பில் நடைபெற்ற போராட்டம் கலவரமானது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் விவசாயிகள் பயிரிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் வளையமாதேவியில் கையகப்படுத்திய நிலங்க ளில் அத்து மீறி யாரும் பிரவேசிக்க கூடாது என என்.எல்.சி. சார்பில் அறி விப்பு பலகை வைக்கப் பட்டது. தற்போது அங்கு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    • பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதேயில்லை. இதுபோன்ற சம்பவம் எந்த நாட்டிலும் நடைபெறாது.
    • தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்க வேண்டும்.

    கடலூர்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதேயில்லை. இதுபோன்ற சம்பவம் எந்த நாட்டிலும் நடைபெறாது. நமது நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சி பணிதான் முக்கியமென ராமேஸ்வரத்திற்கு வந்து நடைபயணத்தை தொடங்கி பேசியுள்ளார். தமிழையும், திருக்குறளையும் பா.ஜ.க.தான் வளர்ப்பது போல அவர் பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு இந்தி, சமஸ்கிருதம் மொழிகளின் வளர்ச்சிக்கு பணம் ஒதுக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்க வேண்டும்.

    நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக மாற்ற பா.ஜ.க. முன்வருமா, தமிழகத்தில் தமிழ் குறித்து பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். என்,எல்.சி.யில் நடைபெற்ற சம்பவம் வருத்தத்திற்குறியது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என்.எல்.சி.யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிகலாபம் ஈட்டி வரும் என்.எல்.சி. நிறுவனம், நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்திற்கு வேலை வழங்கவும், கூடுதல் இழப்பீடு வழங்கவும் முன்வரவேண்டும். நேற்று நடைபெற்ற போராட்டத்தில், தமிழகத்தை விட்டு என்.எல்.சி. வெளியேற வேண்டுமென பா.ம.க.வினர் வலியுறுத்தினர். அவ்வாறு என்,எல்.சி. நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேறினால் 3 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும். தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலை ஏற்படும். ஆகவே, என்.எல்.சி. பிரச்னையை சரி செய்து, பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆகம விதிகளை கற்றுத் தேர்ந்தவர்கள் அனைவரும் கோவில்களில் அர்ச்சகராகலாம் என நீதிமன்றம் கூறியுள்ளதை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இதனை பயன்படுத்தி தமிழக கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • என்.எல்.சி., நிறுவனத்தின் 2-வது அனல் மின் நிலையத்தில் புதிய அனல்மின் நிலையம் உள்ளது.
    • தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.

    கடலூர்:

    என்.எல்.சி., நிறுவனத்தின் 2-வது அனல் மின் நிலையத்தில் புதிய அனல்மின் நிலையம் உள்ளது. இது 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். இங்குள்ள நிலக்கரி கொள்கலன் பிரிவில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

    உடனடியாக தீக்காயமடைந்தவர்கள் நெய்வேலி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. தகவலறிந்து வந்த என்.எல்.சி., நிறுவன உயரதிகாரிகள் திடீரென தீப்பிடித்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×