search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊர்காவல் படை வீரர்"

    • பாலாஜி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பாலாஜி உடன் தகராறில் ஈடுபட்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி(வயது 28). இவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில், பல்லடத்திலிருந்து அருள்புரம் நோக்கி சென்றுள்ளார்.

    பல்லடத்தை அடுத்த பனப்பாளையம் பகுதியில் செல்லும்போது, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல், இன்னொரு மோட்டார் சைக்கிள் முந்தி சென்றது. இதனால் அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை பாலாஜி "பார்த்துப் போ" என்று சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பாலாஜி உடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரரான பல்லடம் மகாலட்சுமி நகரைசேர்ந்த கார்த்திக் குமார் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×