search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளாட்சித் தேர்தலில்"

    • ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்து முடிந்துள்ளன. இதைப்போல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

    இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு–4, நம்பியூர் யூனியன் கெட்டிசெவியூர் பஞ்சாயத்து வார்டு எண்–10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–5.

    பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்–4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்–11,

    கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–1, புளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்–3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண்–2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இது தவிர அம்மாபேட்டை யூனியன் சிங்கம்பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்.2-ல் 2 பேர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்–.3-ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்.–3-ல் 2 பேர், கோபி யூனியன் கோட்டுபுள்ளா ம்பாளையம் பஞ்சாயத்து, வார்டு எண்–1ல் இருவர்,

    மொடக்குறிச்சி யூனியன் 46 புதூர் பஞ்சாயத்து வார்டு எண்.–1-ல் நால்வர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–.3-ல் 3 பேர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்.–2-ல் 3 பேர் என, 7 பதவிக்கு 20 பேர் போட்டியில் உள்ளனர்.

    நாளை(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இதை ஒட்டி அதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்து முடிந்துள்ளன. இதைப்போல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து வரும் 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12-ந் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதன்படி, ஈரோடு அருகே 46 புதூர் 1-வது வார்டு பகுதி, ஆணைக்கல்பாளையம், லக்காபுரம், சோலார், மூலப்பாளையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதியில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அம்மாபேட்டை, அத்தாணி, கோபி, பவானிசாகர், அந்தியூர் பகுதியில் உள்ள, 24 டாஸ்மாக் கடைகளுக்கும் இவ்விரு தினங்கள் விடுமுறை விடுக்கப்படுகிறது.

    ×