search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக தாய்ப்பால் வார விழா"

    • வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இந்த நிகழ்வில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் சார்பாக விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் திவ்யா,

    ரோட்டரி தலைவர் இளஞ்செழியன், செயலாளர் ரகுநந்தன், முன்னாள் பட்டய தலைவர் மாதவன், டாக்டர் ரியாஸ் அகமது, விருவீடு விக்னேஷ் ரவீந்திரன், அட்வகேட் ஹரிஹரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • உலக தாய்ப்பால் வார விழாவை தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் நடந்தது.
    • விழாவிற்கு ரோட்டரி தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி ரோட்டரி சங்கம், ரோட்டரி மிட் டவுன் சங்கம், தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து உலக தாய்ப்பால் வார விழாவை தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் நடத்தினர்.

    இந்த விழாவிற்கு ரோட்டரி தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    ரோட்டரி மிட் டவுன் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    மகளிர் மற்றும் மகப்பேறு பிரிவு மருத்துவத்துறை தலைவர் டாக்டர் புனிதா சிறப்புரையாற்றினார். மாணவிகள் அஸ்வினி, அபிநயா, சுகவர்ஷினி ஆகியோர் உரை நிகழ்த்தினர். விழா முடிவில் ஆசிரியர் ஜலஜா ரமணி நன்றி கூறினார்.

    • உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பிரசவமான சுமார் 150 தாய்மார்களுக்கு புரோட்டீன் பவுடரும், குழந்தைகளுக்கு 2 செட் உடை மற்றும் நேப்கின்களும் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரசவமான சுமார் 150 தாய்மார்களுக்கு புரோட்டீன் பவுடரும், குழந்தைகளுக்கு 2 செட் உடை மற்றும் நேப்கின்களும் வழங்கப்பட்டது.

    இந்திய மருத்துவச் சங்கம் திண்டுக்கல் கிளை, பெண் மருத்துவர் பிரிவு மற்றும் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமை ஏற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னாள் இணை இயக்குநரும், திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தலைவருமான அமலாதேவி தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினார்.

    இந்திய மருத்துவச் சங்கத்தலைவர் மகாலட்சுமி, செயலாளர் கிறிஸ்டோபர்பாபு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, உதவி நிலைய மருத்துவர் ராஜாரசூல், குழந்தை நல மருத்துவர் மாலா , மகப்பேறு மருத்துவ சங்க செயலாளர் விஜயா, பொருளாளர் செல்வராணி மற்றும் பெல்லா பிரிமியர் ஹைஜீனிக் புராடக்ஸ் விற்பனை பிரிவு மேலாளர் பெனின்ரை, திண்டுக்கல் லயன்ஸ் சங்க பொருளாளர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மகப்பேறு துறை தலைவர் கீதா செய்திருந்தார்.

    ×