search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்நலப் பிரச்சனை"

    மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு. பரம்பரை, வைரஸ், அதிக எடை, சில மருந்துகள் என பல காரணங்களால் ஆண்-பெண் இருபாலாரும் கல்லீரல் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
    மருத்துவத்தில் பல நோய்களைப் பற்றியும், அவைகளை வருமுன் காப்பது பற்றியும் நாம் நன்கு கேட்டு, படித்து அறிந்து வருகின்றோம். அவற்றினை கடை பிடித்தும் வருகின்றோம். ஆனால் சில பொதுவான அதிகமாக காணப்படும் பாதிப்புகள் நம் கண்களிலும் கவனத்திலும் தவற விட்டு விடுகின்றோம். அதில் ஒன்றுதான் நம் கல்லீரல் பாதுகாப்பு.

    மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு. பரம்பரை, வைரஸ், அதிக எடை, சில மருந்துகள் என பல காரணங்களால் ஆண்-பெண் இருபாலாரும் கல்லீரல் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

    சில உடல் சொல்லும் அறிகுறிகளை நாம் கவனிக்க வேண்டும்.

    * அடிக்கடி உடல் சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கின்றதா?

    சில சமயம் முதுகுவலி, வயிற்று வலி, கீழ் காலில் சவுகர்யமின்மை ஏற்படுகின்றதா?

    * வயிற்று பிரட்டல், பசியின்மை ஏற்படுகின்றதா?

    * உடல் நிறமோ, கண்ணின் வெள்ளைப் பகுதியோ மஞ்சளாக இருக்கின்றதா?

    * அதிக எடை இருக்கின்றதா? அதனை குறைப்பது மிகவும் கடினமாக இருக்கின்றதா?

    * கழுத்து, கை உள் மடிப்பு பகுதிகளில் அடர்ந்த கறுப்பு நிறம் இருக்கின்றதா?

    * உங்கள் சருமம் ஆரோக்கியமற்று இருக்கின்றதா?

    * வயிற்று வலி, பிடிப்பு போன்றவை ஏற்படுகின்றதா?

    * தலைவலி, குழப்பம், கவனக்குறைவு ஏற்படுகின்றதா?

    * எப்போதும் பசி, அதன் காரணமாக அதிகம் சர்க்கரை, கார்போஹைடிரேட் உணவு உண்ணுதல் போன்ற பாதிப்புகள் உள்ளதா?

    * என்னவென்றே தெரியாத உடல்நலமின்மை உள்ளதா?

    இவைகளில் அனைத்துமோ, சிலவோ இருக்குமானால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது கொழுப்பு நிறைந்த கல்லீரலின் பாதிப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. இதற்கு உடனடியாக முறையான கவனம் கொடுக்கவில்லை என்றால் கல்லீரலில் அதிக பாதிப்பு, இருதய பாதிப்பு, பக்க வாதம், சர்க்கரை நோய், புற்று நோய் என பல கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.

    இன்று குறைந்தது 500-க்கும் மேற்பட்ட வேலைகளை கல்லீரல் செய்கின்றது.

    * உடலில் நச்சுக்களை நீக்குகின்றது.

    * குளுகோசினை சேமித்து தேவைப்படும் போது சக்தியாக வெளியிடுகிறது.

    * ரத்தத்தில் கிருமிகளை நீக்குகின்றது.

    * ரத்தத்தில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகின்றது. இப்படி விவரித்துக் கொண்டே போகலாம்.

    * இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் கொழுப்பு சேர்ந்த கல்லீரலாக மாறும் போது அது வீக்கம் பெறுகின்றது. பெரிதாகின்றது. அதனுடைய வேலைகளை முறையாக செய்ய முடியாமல் போகின்றது.

    * அதிக எடை ஆகியவை கொழுப்பு கல்லீரலுக்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    * கல்லீரலில் 10 சதவீதம் சரியாக வேலை செய்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

    கல்லீரலை ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வது எப்படி?

    * நோயினை எதிர்ப்பது என்பது நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது ஆகும்.

    * அளவான எடை இருக்குமாறு நம்மை காக்க வேண்டும். அதிக எடையினை குறைப்பது கல்லீரலில் உள்ள கொழுப்பினை குறைக்க உதவும்.

    * விகிதாச்சார உணவு அவசியம். அதிக கலோரி சத்து உள்ள உணவு, அதிக கொழுப்பு, மைதா வகைகள், அதிக பாலிஷ் செய்த அரிசி, சர்க்கரை இவற்றினைத் தவிருங்கள். நார் சத்து மிகுந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுகள், கொட்டைகள், விதைகள் இவைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

    * அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் கல்லீரல் கொழுப்பினை குறைக்கும்.

    * மது, புகை, புகையிலை போன்ற நச்சுப் பொருட்களை அடியோடு தவிர்ப்போம்.

    * உங்கள் சுகாதாரப் பொருட்களை மற்றவர்களுடன் பங்கு போட வேண்டாம்.

    * கல்லீரலுக்கான ஏ, பி. வைரஸ் தவிர்க்க நடைபயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இது அவசியம்.

    * மது அருந்துபவர்கள், அருந்தாதவர்கள் இருவரும் கொழுப்பு நிறைந்த கல்லீரல் நோய்க்கு தீர்வாக மேலும் சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

    * அளவான முறையில் காபி அருந்தலாம். காபியில் உள்ள கேபின் கல்லீரலில் ஏற்படும் முறையற்ற என்ஸைம்கள் அளவினை சரி செய்யும்.

    * கீரைகள், பச்சை காய்கறிகள் பெரிதும் உதவும்.

    * டோஃபு எனப்படும் சோயா பன்னீரினை அளவாய் பயன்படுத்தவும்.

    * மீன், ஒமேகா -3 இவை கல்லீரல் வீக்கம், கொழுப்பு இரண்டினையும் வெகுவாய் குறைக்கும்.

    * ஒட்ஸ் உணவினை காலை உணவாக உட்கொள்ளலாம்.

    * வால் நட்ஸ் எனப்படும் பாதாம்பருப்பு தினமும் 3-4 எடுத்துக்கொள்ளலாம்.

    * கொழுப்பு குறைந்த பால் உபயோகிக்கலாம்.

    * ஆலிவ் எண்ணெயினை சமையலில் பழக்கிக் கொள்ளுங்கள்.

    * பூண்டினை அன்றாட உணவில் அவசியம் சேர்க்க வேண்டும்.

    * கிரீன் டீ ஒரு வேளையாவது பருகுங்கள்.

    * பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

    மேலும் எப்போதும் சுறுசுறுப்பாய் இருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்த படியே இருக்காதீர்கள். தினமும் 20 நிமிட உடற்பயிற்சி செய்யுங்கள்.

    கொழுப்பினை உணவில் வெகுவாய் குறையுங்கள்.

    சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வையுங்கள்.

    மேலும் ஆல்கஹால், வறுத்த, பொரித்த உணவுகள், அதிக உப்பு, அதிக அசைவம் இவற்றினைத் தவிருங்கள்.
    வாயு பிடிப்பை போக்க கூடியதும், கொழுப்பை குறைக்கவல்லதும், கை கால் குடைச்சலுக்கு மருந்தாக என பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது பிரண்டை.
    எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க கூடியதும், கொழுப்பை குறைக்கவல்லதும், கை கால் குடைச்சலுக்கு மருந்தாக அமைவதுமான பிரண்டையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?. வீட்டில் எளிதில் வளர்க்க கூடிய பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

    அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.

    எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.



    வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.  மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

    ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.
    நாட்பட்ட நோய் பாதிப்பு அல்லது சில குறிப்பிட்ட நோய் பாதிப்புகள் உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக கருதப்படுகிறது.
    நாட்பட்ட நோய் பாதிப்பு அல்லது சில குறிப்பிட்ட நோய் பாதிப்புகள் உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக கருதப்படுகிறது. கொப்பளங்களைப் போக்க பல எளிய தீர்வுகள் இருந்தாலும், அவை உடலில் ஏற்படத் தொடங்கும்போதே அதற்கான சிகிச்சையை பின்பற்றி அவற்றைப் போக்குவது நல்லது.

    சருமத்தில் உண்டாகும் சீழ் நிறைந்த தடிப்புகள் கொப்பளங்கள் ஆகும். பொதுவாக இவை சிவப்பு நிறத்தில் தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதி பொதுவாக வலி நிறைந்து காணப்படும். அவ்வப்போது சீழ் வடிதலும் இருக்கும். இவை தொற்று பாதிப்பால் உண்டாவதால் உடலின் மற்ற இடங்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது மற்றும் சிறிய அளவில் இருந்து பெரிய அளவாக வளரவும் வாய்ப்புகள் உள்ளது.

    பொதுவாக உடலில் முடி அதிகம் இருக்கும் இடங்களில் கொப்பளங்கள் தோன்றலாம். கொப்பளங்கள் உருவாவது மற்றும் தொற்றுவதில் இருந்து எப்படி தடுப்பது கொப்பளங்கள் உருவாவதை கணிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் சருமம் தடிக்கும் வரை கொப்பளம் உருவாவதை நாம் அறிந்து கொள்ள முடியாது. அப்படி தடிப்புகள் உண்டான இடங்களை கிள்ளவோ, சொரியவோ, கீறவோ கூடாது என்பது முக்கியமாக அறிவுறுத்தப்படுகிறது.

    வலியுடன் கூடிய சரும தடிப்புகள் இருந்தால் நாளடைவில் அது கட்டியாக உருவாகலாம். ஆகவே அந்த இடத்தில் வெந்நீர் ஒத்தடம் தருவதால் வலி குறைந்து சீழ் கட்டாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. வெதுவெதுப்பான துணியால் ஒத்தடம் தருவதால், சீழ் கட்டியாக மாறாமல், எளிதில் தடிப்பு கரைந்து விடலாம்.



    கொப்பளங்கள் உள்ளவர்கள் பயன்படுத்தும் துண்டு அல்லது ஆடைகளை மற்றவர் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். முன்கூட்டியே கட்டிகள் கண்டறியப்பட்டால், இறுக்கமாக ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். குறுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினி சோப்பு பயன்படுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்யலாம். கொப்பளங்களுக்கு அதன் தீவிர தன்மையைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படலாம்.

    வெந்நீர் ஒத்தடம் சிறிய அளவு வலியில்லாத கொப்பளங்கள் தானாக குணமாகிவிடும். அப்படி குணமாகவில்லை என்றால் வெந்நீர் ஒத்தடம் நல்ல தீர்வைத் தரும். பெரிதாக வளர்ந்த கொப்பளங்களைப் போக்க நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பட்ட ஒத்தடம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சை நல்ல பலனத் தரும். சூடு ஒத்தடம் தருவதால் வெள்ளை இரத்த அணுக்களின் ஓட்டம் அதிகரித்து விரைந்து காயங்கள் குணமடைகிறது. சூடு ஒத்தடத்தை சரியான வழியில் பின்பற்றினால் ஆச்சர்யமான விளைவுகளைக் காண முடியும்.

    டீ ட்ரி ஆயில் டீ ட்ரீ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவதால் அவற்றின் கிருமி எதிர்ப்பு தன்மை காரணமாக கொப்பளங்கள் எளிதில் குணமாக முடியும். மஞ்சள் மஞ்சளுக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மைகள் இருப்பதால் கொப்பளங்களைப் போக்க சிறந்த தீர்வைத் தருகிறது. மஞ்சளை சருமத்தின் மேல்புறமாக தடவலாம் அல்லது மஞ்சள் கலந்த நீரை பருகலாம்.

    வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றிற்கு கிருமி எதிர்ப்பு தன்மை உள்ளது. இவை கொப்பளங்களை எதிர்த்து போராடுகிறது. கிருமிநாசினி தன்மை உள்ள இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால் கொப்பளங்கள் நீண்ட காலம் சருமத்தில் இருப்பதில்லை. கொப்பளங்கள் பெரிதாக, வலி அதிகமாக, சீழ் அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் சென்று கொப்பளத்தை வெட்டி எடுக்க வேண்டியது அவசியமாகும்.

    கொப்பளத்தைக் குத்தி அதில் உள்ள சீழை வெளியேற்றி காயத்தை மருத்துவர்கள் அகற்றுவார்கள். இந்த சிகிச்சையுடன் நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சையை சேர்த்து அளிப்பதால், வலி குறைந்து தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது. கொப்பளத்தின் நிலையை அறிந்து தீவிரத்தை உணர்ந்து மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. 
    ×