search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை"

    முத்துப்பேட்டை அருகே திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே உள்ள முனங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கோட்டூரை அடுத்த இருள்நீக்கி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    ஜெயராமன் திருமணத்திற்கு பின் மீண்டும் வெளி நாட்டிற்கு வேலைக்காக சென்று விட்டார். இதனால் பரமேஸ்வரி கணவர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது பரமேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பரமேஸ்வரி தந்தை சரவணன் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து பரமேஸ்வரி கணவர் வீட்டில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதும் காரணமா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமேஸ்வரிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் முடிந்தது என்பதால் ஆர்.டி.ஓ.வும் தனி விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×