search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருளப்பபுரத்தில்"

    • கோவில் முன்பு படுத்திருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை
    • நாகர்கோவில் இருளப்பபுரத்தில் பசுபதீஸ்வரர்-பிரசன்னபார்வதி கோவில் உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இருளப்பபுரத்தில் பசுபதீஸ்வரர்-பிரசன்னபார்வதி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கம். நேற்று சரசுவதி பூஜை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்தனர்.

    வழிபாடுகள் முடிந்ததும் இரவில் கோவிலை அர்ச்சகர் பூட்டிச் சென்றார். பின்னர் அவர் இன்று காலை கோவிலுக்கு வழக்கம்போல் வந்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் உண்டியலின் அருகே காணிக்கை சில்லறைகள் சிதறி கிடந்தன. இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவ பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அப்போது, உடைக்கப்பட்ட உண்டியலின் அருகே வாலிபர் ஒருவர் படுத்திருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது ஏதேதோ கூறி உள்ளார்.

    இதனைத்தொடர்ந்து அந்த வாலிபரை, கோட்டார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பூட்டிய அறையில் பிணமாக கிடந்தார்
    • ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோட்டார் இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் தெருவை சேர்ந்த வர் நாகராஜன். இவரது மகன் கவுதமன் (வயது 24). இவர் சென்னை யில் உள்ள சட்ட கல்லூரியில் படித்து வந்தார். தற்பொழுது கல்லூரிக்கு செல்லாமல் ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தார்.

    இந்நிலையில் கவுதமன் கடந்த சில நாட்களாக சரிவர வீட்டில் யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் மனவிரக்தியில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு கவுதமன் தனது அறைக்கு சென்றார். மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையின் கதவு திறக்கப்பட வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜன் மகனை பலமுறை அழைத் துப் பார்த்தும் கதவு திறக்கப் படாததால் கதவை உடைத்து பார்த்தபோது கவுதமன் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த கவுதமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கவுதமன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பலியான கவுத மனின் உடல் பிரேத பரிசோ தனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவி னர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    ×