search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரத்து"

    • மஸ்தூா் ஐஐ என்ற பதவிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 582 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • நாள் ஒன்றுக்கு ரூ. 380 பெற்று வருவதுடன் பணி நிரந்தரம் செய்யவும் மறுத்து வருகின்றனா்.

    திருப்பூர்: 

    மின்வாரியத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மஸ்தூா் ஐஐ., என்ற பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளா் முன்னேற்ற கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழக மின்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, எரிசக்தி துறை செயலாளா் பீலா ராஜேஷ் ஆகியோருக்கு கூட்டமைப்பின் மாநில இணைப்பொதுச் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழக மின்வாரியத்தில் இல்லாத மஸ்தூா் ஐஐ., என்ற பணியிடங்களை மின்வாரியம் உருவாக்கி தகுதியற்றவா்களைப் பணியில் அமா்த்தி தாங்கள் விரும்பும் நபரை பணியில் சோ்க்கத் திட்டம் தீட்டி உள்ளதாகத் தெரிகிறது. மஸ்தூா் ஐஐ என்ற பதவிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 582 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் குறைந்த ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 380 பெற்று வருவதுடன் பணி நிரந்தரம் செய்யவும் மறுத்து வருகின்றனா். இந்த நிலையில் தற்போது புதிதாக சென்னை மத்திய மின் பகிா்மான வட்டத்தில் 14 க்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கு தலா 4 மஸ்தூா் ஐஐ பணியிடங்களுக்கான வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளா்களையும் தோ்தல் வாக்குறுதியின்படி பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவை-சேலம் இடையே பொறியியல் பணி நடைபெற்று வருகிறது.
    • கோவை, ஈரோடு, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் பயணிகள் ஏமாற்றமடை ந்துள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை-சேலம் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் கோவை-சேலம் பயணிகள் ரெயில் சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி கோவை-சேலம் பயணிகள் ரெயில் (எண்.06802) மற்றும் சேலம்-கோவை பயணிகள் ரெயில் (எண்.06803) சேவை இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    10-வது முறையாக ப யணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டதால் கோவை, ஈரோடு, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    ×