என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை உணவு"

    • குடும்ப நல நீதிபதியும், நீதிமன்ற பாலின உணா்திறன் குழு தலைவருமான வி.பி.சுகந்தி வரவேற்புறையாற்றினாா்.
    • இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இயற்கை உணவே சிறந்தது என்றாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் நீதிமன்ற பணியாளா்களுக்கான பாலின உணா்திறன் மற்றும் ஆரோக்கியமான உணவு முறை தொடா்பான கருத்தரங்கு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்தாா். குடும்ப நல நீதிபதியும், நீதிமன்ற பாலின உணா்திறன் குழு தலைவருமான வி.பி.சுகந்தி வரவேற்புறையாற்றினாா்.

    இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயற்கை மருத்துவா் யுவபாரத் பேசியதாவது:-

    நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவே நமக்கு சிறந்த மருந்தாகும். அதிலும், தாவரங்களில் இருந்து மட்டுமே நமது உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கின்றன. அசைவ உணவுகளை உட்கொள்வதாலும், அதிக அளவில் உணவை வேகவைத்து சாப்பிடுவதாலும் அதிக நோய்கள் வருகின்றன. ஆகவே இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இயற்கை உணவே சிறந்தது என்றாா். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் சாா்பு நீதிபதியும், திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலருமான மேகலா மைதிலி, நீதிபதிகள், வக்கீல்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • இயற்கை உணவு சமையல் போட்டி நடந்தது.
    • ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வளர்மதி செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராசரத்தினம் மகளிர் கல்லூரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்திய சிந்தனை அமைப்பின் சார்பில் இயற்கை உணவு சமையல் போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார்.

    கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போட்டியில் 56 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் இளநிலை 2-ம் ஆண்டு மாணவிகள் விக்னேஸ்வரி, ஈஸ்வரி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

    இளநிலை 2-ம் ஆண்டு மாணவிகள் மேகலா, முத்தமிழ் மாலா ஆகியோர் 2-ம் பரிசும், இளநிலை முதலாம் ஆண்டு மாணவிகள் பிரியதர்ஷினி, சந்தியா ஆகியோர் 3-ம் பரிசும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காந்திய சிந்தனை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை வளர்மதி செய்திருந்தார்.

    • காய்கறிகளை சமைத்து உண்பதால் அவற்றில் இருக்கும் சத்துக்கள் பெரும்பாலும் வீணாகி விடுகின்றன.
    • அறுவடை செய்யப்படும் இளம் தளிர்களில் செறிவூட்டப்பட்ட சுவைகள் நிரம்பி இருப்பதுடன், உண்ணவும் மென்மையாக இருக்கிறது.

    இலை, தழைகளை உண்டு வாழும் விலங்குகள் அவற்றின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட சத்துக்களையும் இலை, தழைகளில் இருந்து பெறுகின்றன. மனிதர்கள் பெரும்பாலும் காய்கறிகளை சமைத்து உண்பதால் அவற்றில் இருக்கும் சத்துக்கள் பெரும்பாலும் வீணாகி விடுகின்றன.

    இதற்கு மாற்றாக, தற்போது உலகின் பல நாடுகளிலும் செடிகளின் இளந்தளிர்களை 'சாலட்' போன்ற வடிவில் உணவாக உட்கொள்ளும் கலாசாரம் பரவி வருகிறது. இதற்கென்று, குறிப்பிட்ட காய்கறிகள், தானியங்களை சிறிய தட்டுகளில் வளர்த்து அவை முளை விடும் பருவத்தில் அந்த இளம் தளிர்களை சேகரித்து உணவாக எடுத்துக்கொள்கின்றனர். இதனை 'மைக்ரோ கிரீன்' என்று அழைக்கின்றனர்.

    இது ஏறக்குறைய கோவில் விழாக்களில் சுமந்து செல்லப்படும் முளைப்பாரி வகை தாவர வளர்ப்பு முறை என்று சொல்லலாம். இந்த மைக்ரோ கிரீன் முறையில் வளர்க்கப்படும் தாவரங்கள் வீடுகளில் வளர்க்கப்படும்போது அவற்றுக்கு எந்த விதமான பூச்சி மருந்துகளும் பயன்படுத்துவது இல்லை. அறுவடை செய்யப்படும் இளம் தளிர்களில் செறிவூட்டப்பட்ட சுவைகள் நிரம்பி இருப்பதுடன், உண்ணவும் மென்மையாக இருக்கிறது. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இவை மனித உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது என்று இயற்கை உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இதய நோய், வகை-2 நீரிழிவு நோய், சில புற்றுநோய்கள் மற்றும் உடல் பருமன் போன்றவை வரும் அபாயத்தை மைக்ரோ கிரீன் வகை உணவுகள் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

    ×