search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆற்றூர்"

    • உலக சுகாதார மையம் 2023-ம் ஆண்டை சிறு தானியங்கள் ஆண்டாக அறிவித்திருந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை என்.வி.கே.எஸ்.டி. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் செய்து காட்சிபடுத்தினார்கள்.

    திருவட்டார்:

    உலக சுகாதார மையம் 2023-ம் ஆண்டை சிறு தானியங்கள் ஆண்டாக அறிவித்திருந்தது. இதையடுத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் சார்பில் பல்வேறு மாநிலங்களில் சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை சார்பில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் கம்பு, சோளம், குதிரை வாலி உட்பட சிறு தானியங்களால் செய்யப்பட்ட 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை என்.வி.கே.எஸ்.டி. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் செய்து காட்சிபடுத்தினார்கள். இந்த உணவு வகைகளை பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சின் ஒரு பகுதியாக என்.வி.கே.எஸ்.டி. கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில் சிறுதானிய உணவு கவுண்டரை திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் முன்னிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் என்.வி.கே.எஸ்.டி. கல்வி குழுமங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார், மாநகராட்சி, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள், என்.வி.கே.எஸ்.டி. மேல்நிலைபள்ளி ஆற்றூர் முதல்வர் விமலாஸ்ரீ, கல்வியியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீலதா, என்.வி.கே.எஸ்.டி. வித்யாலயா வெட்டு வெந்தி முதல்வர் அனிதா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரஷோப் மாதவன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • தாயாரை ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே ஆற்றூர் புல்லாணிவிளை பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 32), கர்ப்பிணியாக உள்ளார். இவர் தன் தாய் வீட்டில் இருக்கும்போது இவரது அண்ணன் செந்தில் (37) வந்து கவிதாவை அவதூறாக பேசி தாக்க முயற்சித்தார். இதனை கவிதாவின் தாயார் தங்கம் தடுக்க வந்தார். அப்போது செந்தில் தன் தாயாரை தள்ளியதில் அவர் கீழே விழுந்தார். இதில் இவரது தலையில் அடிப்பட்டது. கவிதா தன் தாயாரை ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இதுபற்றி கவிதா கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் செந்தில் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×