search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

    • மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • மாணவ-மாணவிகள், விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக, பள்ளிகளில் பயிலும் மாணவ-மாண விகள் விளையாட்டுத் துறை யில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் மாண வர்களுக்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வரு கின்றன. மேலும் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்ப லூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை, திருச்சி, திரு நெல்வேலி ஆகிய இடங்க ளில் மாணவிக ளுக்கான விளை யாட்டு விடுதி செயல்பட்டு வருகின்றன.

    மேலும் சென்னை, ஈரோட்டில் மாணவர்க ளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதியும், சத்துவாச்சேரி வேலூரில் மாணவர்க ளூக்கான முதன்மை நிலை விளையாட்டு விடுதியும் செயல்பட்டு வருகின்றன.

    இந்த விளையாட்டு விடுதிகளில் 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 24-ந்தேதி அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் விளையாட்ட ரங்கங்களில் நடைபெற உள்ளது

    மாணவர்களுக்கான தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்து பந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல் போன்ற விளையாட்டுக்களில் தேர்வு நடைபெறும். மாணவி களுக்கான தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்து பந்து, கபடி, டென்னிஸ், ஜீடோ, ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல், மேசைப்பந்து போன்ற விளையாட்டுக்க ளில் தேர்வு நடைபெறும்.

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்க ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளை யாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள், விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய கடைசி நாள் வருகிற 23-ந் தேதியாகும். விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் சேர விரும்பும் மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வருகிற 24-ந்தேதி காலை 7 மணிக்கு சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. 

    • சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனா ளிகள் உதவித்தொகை, கணவ னால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை மற்றும் ஆதர வற்ற விதவை உதவித்தொகை பெற விரும்பும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

    ஆதார் அட்டை, கலர் புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எண், குடும்ப அட்டை, செல்போன் எண் ஆகிய உரிய அசல் ஆவணங்களுடன் அருகில் உள்ள இ - சேவை மையத்திற்கு சென்று ஆன்லைனில் பதிவு செய்து பயன்பெறு மாறு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித் துள்ளார் .

    • மாணவர்களின் வசதிக்காக வரும், 27-ந் தேதி முதல் கல்லூரியில் தகவல் மையம் செயல்படும்.
    • விண்ணப்பங்கள் கல்லுாரியில் நேரடியாக விற்பனை செய்யப்படாது. பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை அரசு கலைக் கல்லுாரியில் 23 இளங்கலை பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் இளநிலை படிப்பு முதலாம் ஆண்டில் மொத்தம் 1,433 இடங்கள் உள்ளன. அதன்படி வரும், 2022–-23 ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

    இதற்காக மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். www.tngasa.org, www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக வரும், 27-ந் தேதி முதல், ஜூலை, 15-ந் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பங்கள் கல்லுாரியில் நேரடியாக விற்பனை செய்யப்படாது. பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று, பிளஸ்2 முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், விண்ணப்பங்கள் பெற மாணவர்கள், பெற்றோர் நேரடியாக கல்லுாரிக்கு வரத்தேவையில்லை என, கல்லுாரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், மாணவர்களின் வசதிக்காக வரும், 27-ந் தேதி முதல் கல்லூரியில் தகவல் மையம் செயல்படும் என, நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×