search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு பலி"

    • உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்
    • சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

    குடியாத்தம்;

    குடியாத்தம் அடுத்த மோடிக்குப்பம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு.

    இவர் தனது விவசாய நிலத்தில் 5 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    நேற்று நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை,பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர் வளர்த்து வரும் நாய் கொடூரமாக கடித்தது. இதனால் ஆடு பலியானது.

    இதையடுத்து ஆத்திரமடைந்த ரகு இறந்த ஆட்டுடன் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு ரகுவுக்கு சொந்தமான மற்றொரு ஆட்டை நாய் கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.

    நாய் கடித்து இறந்து போன ஆட்டுடன் விவசாயி போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • ஒரு ஆடு மட்டும் காணாமல் போனதால் சகுந்தலா அப்பகுதியில் தேடி பார்த்தார்.
    • வாழைத்தோட்டத்தில் காணாமல் போன ஆடு இறந்து கிடந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் அடுத்த பெருமா பாளையம் அழகு நகரை சேர்ந்தவர் சகுந்தலா. இவர் சுமார் 10-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற ஆடுகளை சகுந்தலா இரவு வழக்கம் போல் தனது வீட்டின் அருகே கட்டி வைத்துள்ளார்.

    பின்னர் இன்று காலையில் எழுந்து பார்த்த போது ஒரு ஆடு மட்டும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சகுந்தலா அப்பகுதியில் தேடி பார்த்தார்.

    அப்போது அதே பகுதியில் உள்ள சாமி யாத்தாள் என்பவரது வாழைத்தோட்டத்தில் காணாமல் போன ஆடு இறந்து கிடந்தது. கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த ஆட்டை மர்ம விலங்கு கவ்வி சென்று கொன்றிருக்க லாம் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இது குறித்து நகலூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அந்தியூர் வனத்துறையி னருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. மர்ம விலங்கால் ஆடு கொல்ல ப்பட்ட சம்பவம் அப்பகுதி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்கள் பீதி
    • மேலும் 3 ஆடுகள் படுகாயம்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் சென்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு இவரது மனைவி ஈஸ்வரி (வயது 50). இவருக்கு சொந்தமான நிலம் வனத்துறையினருக்கு சொந்தமான இடத்தையொட்டி உள்ளது.

    இவருக்கு சொந்தமாக 4 ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல நேற்று காலை தனது 4 ஆடுகளை மேய்ச்சலுக்கு தன்னுடைய நிலத்தில் கட்டியிருந்தார். அப்போது மதியம் ஈஸ்வரி தங்களது ஆடுகளை பார்க்க சென்றார்.

    இதில் 4 ஆடுகள் நிலத்தில் மயங்கி விழுந்து கிடந்தது. இதனை கண்ட ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அதனை பார்த்த போது மர்ம விலங்கு கடித்ததால் ஒரு ஆடு இறந்தது தெரியவந்தது. மேலும் 3 ஆடுகள் படுகாயம் அடைந்திருந்தது.

    இதுகுறித்து ஈஸ்வரி உடனடியாக நாட்டறம்பள்ளி கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் 3 ஆடுகள் சிகிச்சை பெற்று வருகின்றது.

    மேலும் அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறுத்தை போன்ற விலங்கு கடித்தா என அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதனால் அப்பகுதியில் வனத்துறையினர் மர்ம விலங்கு விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×