search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் மீது வழக்கு"

    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 7.50 லட்சம் பணமோசடி செய்த அரியலூர் ஆசிரியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம்  சக்திநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரை நெய்வேலியை சேர்ந்த சிவக்குமார், சு.ஆடுதுறையை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் அணுகி, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். 

    இதையடுத்து விஸ்வநாதன், அவரது நண்பரான அரியலூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ராயப்பன் என்பவரை அணுகியுள்ளார். அவர் கரூரை சேர்ந்த சேர்மன் என்பவர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக  சிவக்குமார், மணிகண்டன் ஆகியோரிடமிருந்து  முன்பணமாக ரூ.7.50 லட்சத்தை வாங்கிய விஸ்வநாதன், அதனை ராயப்பனிடம் கொடுத்துள்ளார். ஆனால்  நீண்ட நாட்களாகியும் ராயப்பன் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. 

    இது குறித்து விஸ்வநாதன் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, இது குறித்து நடவடிக்கை எடுக்க அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில்  போலீசார் ஆசிரியர் ராயப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பள்ளி மாணவனின் பிறப்புறுப்பில் தாக்கிய ஆசிரியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அழகாபுரியை சேர்ந்த சேதுராஜ் என்பவர் மகன் சேகர் (வயது 13). இவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இவரின் தாய் சந்திரா (32). இவர் டெய்லரிங் தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த சேகர் மிகவும் சோர்வாக இருந்துள்ளான். கட்டிலில் படுத்தவன் எழுந்திரிக்க முடியாமல் இருந்தாராம். இதனால் பதறிப் போன பெற்றோர் அவனை திருவேங்கடத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தன்னிடம் பள்ளியில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாததால் ஆசிரியர் பிறப்புறுப்பில் அடித்ததாகவும் அதனால் வலி தாங்க முடியாமல் உள்ளதாக சேகர் தெரிவித்தான்.

    மேலும் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதால் அவனின் பெற்றோர் மேல் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக குருவிகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் குருவிகுளம் போலீசார் பள்ளி மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×