search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது வழக்கு
    X

    சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது வழக்கு

    பள்ளி மாணவனின் பிறப்புறுப்பில் தாக்கிய ஆசிரியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அழகாபுரியை சேர்ந்த சேதுராஜ் என்பவர் மகன் சேகர் (வயது 13). இவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இவரின் தாய் சந்திரா (32). இவர் டெய்லரிங் தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த சேகர் மிகவும் சோர்வாக இருந்துள்ளான். கட்டிலில் படுத்தவன் எழுந்திரிக்க முடியாமல் இருந்தாராம். இதனால் பதறிப் போன பெற்றோர் அவனை திருவேங்கடத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தன்னிடம் பள்ளியில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாததால் ஆசிரியர் பிறப்புறுப்பில் அடித்ததாகவும் அதனால் வலி தாங்க முடியாமல் உள்ளதாக சேகர் தெரிவித்தான்.

    மேலும் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதால் அவனின் பெற்றோர் மேல் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக குருவிகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் குருவிகுளம் போலீசார் பள்ளி மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×