search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அல் ஷபாப் பயங்கரவாதிகள்"

    கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. #KenyaHotelAttack #UNcondemns
    நைரோபி: 

    கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று மாலை பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.  

    இதில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இந்நிலையில், கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக ஐ.நா. சபை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கென்யா ஓட்டலில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது கொடூரமானது. இந்த தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஐ.நா. பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் மற்றும் ஐ.நா. சபை தலைவர் எஸ்பினோசா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலையும், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KenyaHotelAttack #UNcondemns
    சோமாலியா அதிபர் மாளிகை அருகே இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் உள்துறை அமைச்சக தலைமையகத்தின் அருகே இன்று பிற்பகல் இரு கார் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

    அல் ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ள இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Somalia #AlShabab
    ×