search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசிஆலை"

    • மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது.
    • சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அரிசி ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சிங்கனூர் பகுதியில் தனியார் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. அரிசி ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். உரிய அனுமதி இன்றியும், விதிமுறைகளை மீறி இயங்கி வரும் அரிசி ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும், அரிசி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அரிசி ஆலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ( திருப்பூர் தெற்கு ) சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படிஉதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையின் பேரில் அரிசி ஆலையின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். இந்த நிலையில் மின் இணைப்பை துண்டித்த பின்னும் இரவு நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் அந்த அரிசி ஆலை இயங்குவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உரிய அனுமதி இன்றி செயல்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அரிசி ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    ×