search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவணை"

    • சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
    • தற்போது சர்க்கரை வரத்து சீரானதை தொடர்ந்து அரவணை உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை:

    சபரிமலையில் தினமும் தற்போது 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    மும்பையில் இருந்து சர்க்கரை வரத்து தாமதமானதால் அரவணை உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அரவணை தட்டுப்பாடு ஏற்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தற்போது சர்க்கரை வரத்து சீரானதை தொடர்ந்து அரவணை உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அய்யப்ப பக்தர்களுக்கு அரவணை பிரசாத வினியோகம் சீராக நடைபெற்று வருவதாக சபரிமலை செயல் அதிகாரி கிருஷ்ணதாஸ் தெரிவித்தார்.

    • சபரிமலையில் நேற்று மாலை அரவணை விற்பனை நிறுத்தப்பட்டது.
    • ஏலக்காய் இல்லாத அரவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டு, தயாரிப்பு பணியும் தொடங்கி விட்டது.

    திருவனந்தபுரம், ஜன. 12-

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் முக்கிய பிரசாதமாக அரவணை மற்றும் அப்பம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் இதனை வாங்கி வீட்டுக்கு வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    இதனால் அரவணை பிரசாதம் டின்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் பிரசாதம் வாங்குவதை கருத்தில் கொண்டு, தட்டுப்பாடு இல்லாமல் இருக்க லட்சக்கணக்கான அரவணை டின்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு அதிக வருவாயும் வருகிறது.

    இந்த நிலையில் அர வணையில் சேர்க்கப்ப டும் ஏலக்காய் தரம் குறைந்திருப்பதாகவும் அதில் பூச்சிக்கொல்லி மருந்து அளவு அதிகமாக இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக தனியார் நிறுவனம் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அரவணை பிரசாதத்தை ஆய்வுக்கு உட்படுத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் நடத்த ப்பட்ட ஆய்வில், அரவணை தயாரிப்பில் தரமற்ற ஏலக்காய் பயன் படுத்தி இருப்பதும், அதில், பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது.

    இதற்கிடையில் 350 கிலோ அரவணையில் 750 கிராம் ஏலக்காய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது மொத்தப் பொருட் களில் வெறும் 0.20 சதவீதம் தான் என தெரிவிக்கப்ப ட்டது. மேலும் அர வணை 200 டிகிரிக்கு மேல் வெப்பநிலையில் தயாரிக்கப்படுவதால் அது தீங்கு விளைவிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஓத்தி வைக்கப்பட்டது.

    அதே நேரம் தரமற்ற ஏலக்காயில் தயாரிக்கப்பட்ட அரவணை விற்பனையை நிறுத்துமாறு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், பிஜி அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து சபரிமலையில் நேற்று மாலை அரவணை விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 6½ லட்சம் டின் அரவணைகள் வீணானது. இதன் மதிப்பு சுமார் ரூ.6½ கோடியாகும்.

    இதுகுறித்து திருவிதா ங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஆனந்த கோபன் கூறுகையில், ஐகோர்ட் உத்தரவுப்படி ஏற்க னவே தயாரித்து இருப்பு வைக்கப்ப ட்டிருந்த அரவணை விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. ஏலக்காய் இல்லாத அரவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டு, தயாரிப்பு பணியும் தொடங்கி விட்டது. 2½ லட்சம் டின்கள் அர வணையை ஓரே நேரத்தில் தயார் செய்யலாம். ஆர்கானிக் ஏலக்காயை கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்து வருகிறோம். அப்படி கொள்முதல் செய்யப்பட்டால், அது அரவணை தயாரிக்கப் பயன்படுத்தப்படும். ஆனால் நாம் முதலில் தரத்தை சரி பார்க்க வேண்டும் என்றார்.

    அதன்படி புதிதாக ஏலக்காய் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட அரவணை இன்று முதல் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

    ×