search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young women arrest"

    கோவையில் 5 வருடமாக பிக்பாக்கெட் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை காரமடையை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி அனிதாதேவி (வயது 33).

    இவர் கோவை உக்கடத்தில் இருந்து வடகோவை சென்ற பஸ்சில் ஒரு பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்த போது தனிப்படை போலீசார் கையும், களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

    இவர் கடந்த 5 ஆண்டுகளாக பஸ்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை, பணம், செல்போன்களை பிக்பாக்கெட் அடித்தது தெரிய வந்தது.

    பயணிகளுக்கு தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால், அடிக்கடி அழகு நிலையத்துக்கு சென்று முடிஅழகை மாற்றி, சிகை அலங்காரம் செய்துள்ளார். திருடிய பணத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார்.

    சுய உதவி குழு தலைவியாகவும் செயல்பட்ட இவர் வங்கியில் இருந்து லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.

    சுய உதவி குழு மூலம் வாங்கிய கடனை அடைப்பதற்காக பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் இதுவரை எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் திருடினார்? திருட்டு பணத்தை வேறு எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    தூசி அருகே கள்ளகாதல் தகராறில் காஞ்சிபுரம் கட்டிட மேஸ்திரியை கொலை செய்த அவரது நண்பர், இளம்பெண் கைது செய்யப்பட்டனர்.
    வெம்பாக்கம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் காரை கிராமம் குட்டை கார தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (35). இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். ராஜாராம் நேற்று முன்தினம் இரவு வெம்பாக்கம் அருகே பில்லாந்தாங்கல் மெயின்ரோட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாராமின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    கொலையான ராஜாராமின் செல்போன் மூலம் போலீசார் துப்பு துலக்கினர். அதில் கடைசியாக பேசியது காஞ்சிபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி (28) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது ராஜாராமின் நண்பர் குமார் (30) என்பவருக்கும் தமிழ்செல்விக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. குமார், தமிழ்செல்வி மூலம் ராஜாராமை வரவழைத்து வெட்டி கொலை செய்ததை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து குமார், தமிழ்செல்வி இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    கொலையுண்ட ராஜாராம், குமார் இருவரும் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

    குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது கள்ளக்காதலி ராஜராராமுடன் தொடர்பில் இருந்தார்.

    இதனால் குமாருடன் பேசுவதை தவிர்த்தார். ஆத்திரமடைந்த குமார் ராஜாராமை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

    நேற்று முன்தினம் இரவு குமார் அவரது மற்றொரு கள்ளக்காதலியான தமிழ்செல்வி மூலம் போனில் பேசி ராஜாராமை கீழ்நெல்லி மெயின் ரோட்டில் உள்ள மைதான பகுதிக்கு வரவழைத்தார்.

    அங்கு சென்ற ராஜாராமை தயாராக இருந்த குமார் கத்தியால் வெட்டி சாய்த்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குமார், தமிழ்செல்வி இருவரையும் கைது செய்தனர். #tamilnews
    ×