search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Writing exam"

    • தமிழகத்தில் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை (சனிக்கிழமை) பல்வேறு இடங்களில் நடக்கிறது.
    • நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 7,918 பேர் எழுதுகிறார்கள்.

    நெல்லை:

    தமிழகத்தில் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை (சனிக்கிழமை) பல்வேறு இடங்களில் நடக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 7,918 பேர் எழுதுகிறார்கள். வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 800 பேர், அரசு பொறியியல் கல்லூரியில் 800 பேர், தியாகராஜ நகர் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் 1,000 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

    வி.எம். சத்திரம் ரோஸ் மேரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 500 பேர், சங்கர்நகர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மெட்ரி க்குலேசன் பள்ளியில் 929 பேர், பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 1,000 பேர், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் 600 பேர், கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 500 பேரும் தேர்வு எழுதுகிறார்கள்.

    பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் பெருமாள்புரம் சாராள் தக்கர் பள்ளியில் 1,000 ேபரும், பெருமாள்புரம் சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 789 பேர் என மொத்தம் நெல்லை மாவட்டத்தில் 7,918 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

    இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள் தேர்வு மையத்துக்கு அழைப்பு கடிதம், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஊதா அல்லது கறுமை நிற பந்து முனைப்பேனா ஆகியவற்றை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    தேர்வு அறைக்கு செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் தொடர்பான எந்த பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

    தேர்வுக்கான ஏற்பாடு களை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    பெரம்பலூர் நீதிமன்றத்தில் இரவுக்காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு எழுத்துத்தேர்வு வரும் 11-ந்தேதி நடைபெற உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- கடந்த 2016-17-ம் ஆண்டில் இரவுக்காவலர், மசால்சி மற்றும் ஜெராக்ஸ் இயக்குபவர் பணிகளுக்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணியளவில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.

    நேர்முகத்தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் நீதிமன்ற இணையதளத்தில் ec-ourts.gov.in/tn/pe-r-a-m-b-a-lur வெளியிடப்பட்டுள்ளது. அப்பெயர்பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
    ×