search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perambalur court"

    செந்துறை அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டம்,செந்துறை அடுத்த பாளையக்குடியை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 20). பொக்லைன் எந்திர டிரைவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொக்லைனை இயக்கி  கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பருத்தி காட்டில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை, மகாதேவன் கடத்தி சென்று தனது உறவினர் வீட்டில் அடைத்து வைத்தார்.

    பின்னர் அந்த சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், சிறுமியிடம் இருந்த நகை, ரூ.10 ஆயிரத்தை பறித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது உறவினரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார். அதன்பேரில், உறவினர்கள் சென்னை சென்று சிறுமியை மீட்டு வந்தனர்.

    இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாதேவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மகாதேவன் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மகிளா கோர்ட்டு நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு அளித்தார்.

    அதில், சிறுமியை கடத்தி சென்றதற்காக மகாதேவனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமியை வீட்டில் அடைத்து வைத்ததற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதையடுத்து மகாதேவனை போலீசார் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் 9-வது வார்டுக்குட்பட்ட துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் எழிலரசன் (வயது 28), கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி பெரம்பலூரை சேர்ந்த 16 வயதான பிளஸ்-2 படித்து கொண்டிருந்த மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் 17-ந்தேதி அந்த மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த எழிலரசன், அந்த மாணவியை மீண்டும் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த மாணவிக்கும், இதனைத் தட்டிக்கேட்ட அவரது தாய், தங்கைக்கும் கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

    இதுகுறித்து அந்த மாணவியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசனை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த வழக்கை நேற்று மாலை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக எழிலரசனுக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும், அபராதம் தொகை செலுத்த தவறினால் மேலும் 4½ ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு வழங்கினார்.

    நீதிபதி விஜயகாந்த் அளித்த தீர்ப்பின் விவரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிக்காக வாதாடிய அரசு தரப்பு வக்கீல் சித்ரா கூறுகையில், எழிலரசன் வலுக்கட்டாயமாக மாணவியை பலாத்காரம் செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அந்த அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனு பவிக்க வேண்டும்.

    அத்துமீறி மாணவியின் வீட்டில் எழிலரசன் நுழைந்ததற்காக 3 ஆண்டுகளும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டும் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததால் 1 ஆண்டும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.

    இந்த 14 ஆண்டு சிறை தண்டனையை எழிலரசன் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததாக கூறினார். இதையடுத்து எழிலரசனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    பெரம்பலூர் நீதிமன்றத்தில் இரவுக்காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு எழுத்துத்தேர்வு வரும் 11-ந்தேதி நடைபெற உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- கடந்த 2016-17-ம் ஆண்டில் இரவுக்காவலர், மசால்சி மற்றும் ஜெராக்ஸ் இயக்குபவர் பணிகளுக்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணியளவில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.

    நேர்முகத்தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் நீதிமன்ற இணையதளத்தில் ec-ourts.gov.in/tn/pe-r-a-m-b-a-lur வெளியிடப்பட்டுள்ளது. அப்பெயர்பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
    ×