search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு 7,918 பேர் தேர்வு எழுதுகிறார்கள்
    X

    நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு 7,918 பேர் தேர்வு எழுதுகிறார்கள்

    • தமிழகத்தில் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை (சனிக்கிழமை) பல்வேறு இடங்களில் நடக்கிறது.
    • நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 7,918 பேர் எழுதுகிறார்கள்.

    நெல்லை:

    தமிழகத்தில் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை (சனிக்கிழமை) பல்வேறு இடங்களில் நடக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 7,918 பேர் எழுதுகிறார்கள். வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 800 பேர், அரசு பொறியியல் கல்லூரியில் 800 பேர், தியாகராஜ நகர் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் 1,000 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

    வி.எம். சத்திரம் ரோஸ் மேரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 500 பேர், சங்கர்நகர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மெட்ரி க்குலேசன் பள்ளியில் 929 பேர், பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 1,000 பேர், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் 600 பேர், கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 500 பேரும் தேர்வு எழுதுகிறார்கள்.

    பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் பெருமாள்புரம் சாராள் தக்கர் பள்ளியில் 1,000 ேபரும், பெருமாள்புரம் சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 789 பேர் என மொத்தம் நெல்லை மாவட்டத்தில் 7,918 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

    இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள் தேர்வு மையத்துக்கு அழைப்பு கடிதம், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஊதா அல்லது கறுமை நிற பந்து முனைப்பேனா ஆகியவற்றை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    தேர்வு அறைக்கு செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் தொடர்பான எந்த பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

    தேர்வுக்கான ஏற்பாடு களை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    Next Story
    ×