என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "World Suicide Prevention Day"
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- பல்வேறு பொதுநல இயக்கங்கள் தற்கொலை எதிர்ப்பு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.
சென்னை:
தினமும் தற்கொலை செய்திகள் இல்லாத நாளிதழ்களே இல்லை எனக் கூறும் அளவுக்கு அற்ப காரணங்களுக்காக எல்லாம் தற்கொலை நிகழ்வுகள் அசாதாரணமாகி விட்டது.
தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.
மேலும், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புது வகையான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும் மோசடிக்காரர்கள் தினமும் புதுவித யுக்திகளைப் பயன்படுத்தி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பல்வேறு பொதுநல இயக்கங்கள் தற்கொலை எதிர்ப்பு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.
உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில், 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
தற்கொலை எண்ணம் எழுவதைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
உண்மையான காரணங்களைக் கண்டறிந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். அதற்கு தற்கொலை தடுப்பு ஆலோசனை மையங்கள் தேவை.
எனவே, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்தால் தற்கொலை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்பதே நம்பிக்கையாகும்.
- வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கார்ப் இந்தியா சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
- மன அழுத்தம், தற்கொலை ஏற்படுவதற்கான காரணங்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், மற்றும்தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கார்ப் இந்தியா சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சுகாதார நிலைய மருத்துவர் அதிகாரி ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். மன அழுத்தம், தற்கொலை ஏற்படுவதற்கான காரணங்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், மற்றும்தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஸ்கார்ப் இந்தியா களப்பணியாளர் கவிதா விளக்கமாக எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் சுகாதார செவிலியர்கள் உதவியாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்டகிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்