என் மலர்
நீங்கள் தேடியது "Worker arrested for"
- குரும்பூர் பகுதியில் ஒருவர் சாராய ஊறல்வைத்து இருந்தது தெரியவந்தது.
- இதுதொடர்பாகபோலீசார் கோவிந்தராய் என்ற தொழிலாளியை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் மதுவிலக்கு தொடர்பாக ரோந்து சென்றனர்.
அப்போது குரும்பூர் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் ஒருவர் சாராய ஊறல்வைத்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு 20 லிட்டர் சாராய ஊறல் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாகபோலீசார் கோவிந்தராய் என்ற தொழிலாளியை கைது செய்தனர். மேலும் சாராய ஊறலையும் அழித்தனர்.
இதே போல் கடம்பூர் அருகே உள்ள அரிகியம் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பிஓட முயன்றனர்.
உடனே போலீசார்அவர்களை மடக்கி பிடித்து விசாரணைநடத்தி அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சா போதை பொருளை கைப்பற்றினர்.
மேலும் அவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடையில் இருந்து ஒருவர் செல்போனை திருடி கொண்டு ஓடினார்.
- பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நந்தா (30). இவர் விஜயமங்கலம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இவர் தனது கடையை திறந்து வைத்து விட்டு அருகே உள்ள வங்கிக்கு சென்றார். இதையடுத்து அவர் மீண்டும் கடைக்கு வந்தார். அப்போது கடையில் இருந்து ஒருவர் செல்போனை திருடி கொண்டு ஓடினார்.
இதனை கண்ட நந்தா சத்தம் போட்டார். இதை கண்ட பொதுமக்கள் செல்போன் திருடி கொண்டு ஓடியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் பெருந்துறை அடுத்த பல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (42). கூலி தொழிலாளி என்பதும், கடையில் செல்போனை திருடியதும் தெரியவந்தது.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து செய்தனர். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






