search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Complain"

    நாய்க்கு தவறான சிகிச்சை அளித்த விலங்கு நல மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    சென்னை:

    தி.நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அதன் மீது மிகுந்த பாசம் வைத்து பராமரித்து வந்தார்.

    அந்த நாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நாயை சிகிச்சைக்காக சேர்த்தார்.

    அங்கு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த பின் நாய் திடீரென இறந்து விட்டது.

    இதுகுறித்து லட்சுமி தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில், “தவறான சிகிச்சை அளித்த விலங்கு நல மருத்துவர் விஜயபாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார். #tamilnews
    ×