search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman walking"

    தென்தாமரைகுளம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பறித்து சென்று விட்டார்.
    நாகர்கோவில்:

    சாமிதோப்பை அடுத்த சோட்டப்பணிக்கன் தேரிவிளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 38). இவர் மார்பிள் கற்கள் பதிக்கும் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயலட்சுமி (34). இவர் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு பகல் 12 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த ஒரு வாலிபர் வந்தார். ஜெயலட்சுமி அருகே சென்றதும் அந்த வாலிபர் அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுபற்றி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் நகையை பறித்துச் சென்ற கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் மூலம் அந்த கொள்ளையனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதேபோல் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் மரியராஜ். இவரது மனைவி அந்தோணியம்மாள் (78).
    சம்பவத்தன்று அந்தோணியம்மாள் வெளியூர் சென்று விட்டு பஸ்சில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    இதை பயன்படுத்தி யாரோ அவரது கழுத்தில் கிடந்த 9 1/2 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர். அஞ்சுகிராமம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது தான் அவருக்கு அது தெரியவந்தது. இந்த துணிகர திருட்டு பற்றி அஞ்சுகிராமம் போலீ சில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து விட்டு வாலிபர் வாய்க்காலில் குதித்து தப்பி ஓடி விட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆம்பூர் சாலையில் ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மது பார் அருகில் நடந்து வந்தபோது பின்புறம் இருந்து வந்த வாலிபர் அந்த பெண் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினார்.

    இதைக்கண்ட அந்த பெண் கூச்சலிட்டபடி அவரை துரத்தினார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த வாலிபரை விரட்டி சென்றனர்.

    அந்த வாலிபர் ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை நடுவே உள்ள வாய்க்காலில் குதித்து ஓடிவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களில் சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பெரியவாய்க்காலில் இறங்கி வாலிபரை தேடினார். ஆனால், அந்த வாலிபர் வாய்க்காலின் வேறு வழியே தப்பி சென்று விட்டார்.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் இருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×