search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman rescued"

    நாகர்கோவில் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே கேசவன்புதூரை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி சரோஜா (வயது 55). இவர், தென்னந்தோப்புகளில் தேங்காய் வெட்டு நடக்கும்போது தேங்காய் எடுப்பதற்காக செல்லும் தொழிலாளி ஆவார். இவர் நேற்று காலை மங்காவிளை நெடுவிளையில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்கு சென்றார். அங்கு வெட்டி போட்ட தேங்காயை எடுத்துக் கொண்டு இருந்தார். தென்னந்தோப்பின் நடுவில் 40 அடி ஆழ கிணறு இருந்தது.

    தேங்காய் எடுத்து கொண்டிருந்த சரோஜா கிணறு இருப்பதை கவனிக்கவில்லை. அதே சமயத்தில் கிணற்றின் தடுப்பு சுவரும் உயரம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் சரோஜா எதிர்பாராதவிதமாக அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. விழுந்த அதிர்ச்சியில் அவர் அங்கேயே மயங்கி விட்டார். இதனால் அவர் கிணற்றில் விழுந்தது, முதலில் யாருக்கும் தெரியாமல் இருந்தது. சிறிது நேரம் கழித்த பின்னர் தான் சரோஜா கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததை சக தொழிலாளர்கள் பார்த்துள்ளனர்.

    பின்னர் இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த சரோஜாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் இறங்குவதற்கு படிக்கட்டுகள் இல்லாததால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.

    40 அடி ஆழ கிணறு

    இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் சரோஜாவை ஒரு வலையில் தூக்கி வைத்து மேலே கொண்டு வந்தனர். இந்த மீட்பு போராட்டம் சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. கிணற்றில் விழுந்ததில் சரோஜாவுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிணற்றில் விழுந்த சரோஜாவை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
    குவைத் நாட்டில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த இந்திய பெண்ணை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நடவடிக்கையால் புதுவை மாநிலத்துக்கு அழைத்து வரப்பட்டார். #Sushmaswaraj

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் நகர் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி விஜய லட்சுமி (வயது 35). இவர், குடும்ப ஏழ்மையின் காரணமாக ஏஜெண்டு மூலம் குவைத்த நாட்டுக்கு வேலைக்கு சென்றார்.

    ஆனால், அந்த ஏஜெண்டின் தவறான வழிகாட்டுதலால் ஒரு வீட்டில் கொத்தடிமையாக விஜயலட்சுமி வேலைக்கு சேர்க்கப்பட்டார்.

    கடந்த 3 மாதங்களாக மிகுந்த சித்ரவதைக் குள்ளாக்கப்பட்டதால் மனமுடைந்த விஜயலட்சுமி அங்கு வி‌ஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    குவைத் அரசு ஆஸ்பத்திரியில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுபற்றி விஜயலட்சுமியின் குடும்பத்தினர் புதுவை பாரதிய ஜனதா கட்சியினரை தொடர்பு கொண்டு குவைத் நாட்டில் இருந்து விஜயலட்சுமியை மீட்குமாறு கேட்டு கொண்டனர்.

     


    இதுபற்றி புதுவை பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தகவல் தெரிவித்து முழு விவரங்களை அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு விஜயலட்சுமியை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.

    இதன் மூலம் விஜய லட்சுமியை எந்தவித பாதிப்பும் இன்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு புதுவைக்கு அனுப்பி வைத்தது.

    இதையடுத்து புதுவை வந்த விஜயலட்சுமி தனது கணவர் சந்திரமோகனுடன் புதுவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், செல்வம், பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார். #Sushmaswaraj

    ×