search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman girl killed"

    • இன்று காலை கார்த்திகா தனது கணவர் சின்னராசுவின் அண்ணன் மகள் சாய் தனியா (5) என்பவருடன் மொபட்டில் வள்ளியூரில் இருந்து கேசவநேரிக்கு சென்று கொண்டிருந்தார்.
    • சிறுமி சாய் தனியா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவநேரியை சேர்ந்தவர் சின்னராசு. இவரது மனைவி கார்த்திகா ( வயது 20).

    கார் மோதல்

    இன்று காலை கார்த்திகா தனது கணவர் சின்னராசுவின் அண்ணன் மகள் சாய் தனியா (5) என்பவருடன் மொபட்டில் வள்ளியூரில் இருந்து கேசவநேரிக்கு சென்று கொண்டிருந்தார்.

    வள்ளியூர் நான்கு வழிச்சா லையை கடக்கும்போது நாகர்கோவிலில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்தது. திடீரென அந்த கார் கார்த்திகாவின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார்த்திகா, சாய் தனியா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

    பரிதாப சாவு

    இதில் படுகாயம் அடைந்த கார்த்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி சாய் தனியா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வள்ளியூர் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்திகா உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுமி சாய் தனியா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காரை ஓட்டி வந்த அமீர் என்பவர் மீது வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் இன்று நடைபெற்ற ‘ரணம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 வயது சிறுமி உள்பட இரு பெண்கள் உயிரிழந்தனர். #Womankilled #blastduringshoot #filmshoot #Bengalurushoot
    பெங்களூரு:

    வி.சமுத்ரா இயக்கத்தில் சிரஞ்சீவி சார்ஜா, சேத்தன் நடிப்பில் ‘ரணம்’ என்ற பெயரில் கன்னட மொழிப்படம் தயாராகி வருகிறது.

    இந்த படத்தின் சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் இன்று நடைபெற்றது. காட்சி அமைப்பின்படி கார் மோதி தீபிடிப்பது போன்ற அமைப்புகள் செய்யப்பட்டபோது அங்கிருந்த ஒரு எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த சுமைரா(28), ஆயிரா(8) ஆகிய இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் இவ்விபத்து தொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Womankilled #blastduringshoot #filmshoot in #Bengalurushoot 
    ×