search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare scheme grants"

    • கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநலகாப்பகங்களில் உள்ளவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவு வழங்க வேண்டும்.
    • மார்ச் மாதம் முழுவதும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி என விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.

    திருப்பூர்:

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் நம்பர்-1 முதல்-அமைச்சரும், திராவிட மாடல் ஆட்சியின் நாயகருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா வருகிற 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், வார்டு என மாவட்டம் முழுவதும் தி.மு.க. கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பல்வேறு முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநலகாப்பகங்களில் உள்ளவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவு வழங்க வேண்டும்.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இலவச கண் மருத்துவ முகாம், ரத்த தான முகாம் நடத்த வேண்டும். மார்ச் மாதம் முழுவதும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி என விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா நடைபெற்றது.
    • மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா்.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா்.

    இதில், மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் 99 சிறுதொழில் முனைவோருக்கு ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகை, 21 ஆதரவற்ற ஏழை முஸ்லிம் பெண்களுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகை, 26 ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ. 1.30 லட்சம் மதிப்பிட்டில் உதவித் தொகை, 27 ஆதரவற்ற முதியோா்களுக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகை உள்பட மொத்தம் 102 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ரவிசந்திரன், திருப்பூா் மாவட்ட மகளிா் உதவும் சங்க கௌரவ செயலாளா் முகமது ஜெக்ரியா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். 

    • பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது
    • பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

    திருவண்ணாமலை:

    வருகிற 8, 9-ந் தேதிகளில் திருவண்ணாமலைக்கு வருகை தரும் தமிழக முதல்- அமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பதினைந்து வயதில் தன் உழைப்பால், தொண்டால், தியாகத்தால் 50 ஆண்டு கால அரசியல் பொது வாழ்வில் சாவல்கள், துரோகங்கள், நெருக்கடிகள், எதிர் கொண்டு வீழ்த்தி வெற்றிமாலை சூடியவர் தலைவர் மு.க.ஸ்டாலின். தோல்விகளை கண்டு துவளாமல், வெற்றிக் களை கண்டு ஆணவம் கொள்ளாமல் இனம், மொழி, நாடு, கலாச்சாரம் என இவற்றிற்கு பணி செய்து கிடப்பதே பணியென இருக்கும் தமிழக முதல்- அமைச்சர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.

    முத்தமிழறிஞர் கலைஞர், "ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு" என வாழ்த்திய வண்ணம், கழக தலைவராக பொறுப்பேற்றது முதல் எதிர் கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிகளை ஈட்டி குறிப்பாக நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாகவும், உள்ளாட்சி மற்றும் நகர்புறத் தேர்தல்களில் நூறு சதவீத வெற்றி கண்டு வெற்றி நாயகனாக திகழ்கிற கழக தலைவர் தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்று முதன் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகள் என 2 நாட்கள் வருகை தர உள்ளார். எனவே அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

    வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை தமிழக முதல்-அமைச்சருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் காலை 10 மணிக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் அன்று மாலை திருவண்ணாமலை- வேலூர் செல்லும் சாலையில் உலக தமிழினத்தின் ஒப்பற்றத் தலைவராம், முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழாவும், பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது.

    அதை தொடர்ந்து மறுநாள் 9-ந் தேதி (சனிக்கிழமை) காலை திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டங்களுக்கு தொடக்க விழாக்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

    எல்லோருக்கும் எல்லாமும், சமூக நீதி, ஜனநாயகம், சமூக வளர்ச்சியை உள்ளடக்கிய உன்னதமான திராவிட மாடல் ஆட்சியை அளித்து கொண்டிருக்கும் தமிழக முதல்- அமைச்சர் வருகைத் தரும் அத்தனை திசைகளிலும் லட்சக்கணக்கில் கூடி, கைகளில் கழக கொடியையும், பதாகைகளையும் ஏந்தி, எழுச்சியான வரவேற்பு அளித்திட வேண்டும். தலைவர் மு.க.ஸ்டாலின் வருகைத் தரும் அந்தந்தப் பகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், அமைப்பு சார்ந்த அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகள் பொறுப்பேற்று உற்சாகமான வரவேற்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×