என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Volleyball matches"
- ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை அணியினர் முதல் பரிசை பெற்றனர்.
- பெண்கள் பிரிவில் முதல் பரிசு சென்னை எஸ்.டி.ஏ.டி. அணி பெற்றது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கைப்பந்துகழக செயலாளர் கதிர்வேல் முருகன் தலைமையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் எஸ்.கே.பி. திடலில் 2 நாள் மின்னொளி கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை அணியினர் முதல் பரிசையும், ராஜபாளையம் அணியினர் 2-ம் பரிசையும், மடத்தூர் எஸ்.கே.பி. குத்தாலிங்கம் நினைவு கைப்பந்து அணியினர் 3-ம் பரிசையும், சுரண்டை அணியினர் 4-ம் பரிசும் பெற்றனர்.
முதல் பரிசு ரூ. 25 ஆயிரம் சிவநாடானூர் பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி வழங்கினார். 2-ம் பரிசு ரூ. 20 ஆயிரம் வினோத்குமார் வழங்கினார். 3-ம் பரிசு ரூ. 15 ஆயிரம் மடத்தூர் ஏபல் எட்வர்ட் தர்மராஜ் லில்லி புஷ்பம் நினைவாக அவர்களது குடும்பத்தினர் வழங்கினர். 4-ம் பரிசு ரூ. 10 ஆயிரம் புல்லுக்காட்டுவலசை தர்மர், பாலு, மாரிமுத்து சிட்பண்ட்ஸ் அதிபர்கள் வழங்கினர்.
பெண்கள் பிரிவில் முதல் பரிசு சென்னை எஸ்.டி.ஏ.டி. அணியினரும், 2-ம் பரிசு தமிழ்நாடு தபால்துறை அணியினரும், 3-ம் பரிசு ஈரோடு பி.கே.ஆர். அணியினரும், 4-ம் பரிசு மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியினரும் பெற்றனர். விளையாட்டு ஏற்பாட்டினை வாஞ்சிநாதன், ஆனந்த், வேல்ராஜ், பிரவின், ஆல்வின் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்